Tuesday, February 12, 2008

418. பெங்களூரை சீரழிக்கும் தகவல் தொழில்நுட்பம்!

உலக அரங்கில் பெயர் பெற்ற, திடநிலை மற்றும் பொருள் வேதியியல் விஞ்ஞானியும் (solid state and materials chemist), பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவரும் ஆன C.N.R. ராவ் பெங்களூரின் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சாடி  அவுட்லுக் இதழில் கூறியுள்ள கருத்துகளை (இயன்றவரை) மொழி பெயர்த்து தந்துள்ளேன்:

எளிமையையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர அனுமதித்த பெருமைக்குரிய பெங்களூர் இப்போது இல்லை! ஒரு காலத்தில், வித்யார்த்தி பவனில் ஒரு மசால் தோசையும், காபியும் உங்களைச் சந்தோஷமாக வைத்திருந்தது.  தற்போதுள்ள பெங்களூர் பெருமளவு சீரழிந்து காணப்படுகிறது.

தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு முன், பெங்களூரில் கவிதையும், இசையும் வாழ்ந்தன. சமீப காலங்களில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பெங்களூரில் பிரதானமாக இருப்பவை அழுகலும், மாசுச்சூழலும், குப்பையும் மட்டுமே!  இக்குப்பையில், தகவல் தொழில் நுட்பத்தின் அறிவுஜீவிக் குப்பையும் அடக்கம்!

பெங்களூர், வெகு காலமாகவே, அறிவார்ந்த நகரமாகவே இருந்து வந்துள்ளது. இந்த நகரத்தை 'கார்டன் சிட்டி' என்று அழைத்தாலும், இந்தியாவின் பல நகரங்களைக் காட்டிலும், அறிவியலில் பெருமைக்குரிய இடத்தை பெங்களூர் பெற்றிருந்தது.  இப்போது அது குறித்து யாரும் பேசுவதில்லை. பெங்களூரை தகவல் தொழில்நுட்ப நகர் என்றே அழைக்கின்றனர்!  தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில், வேலை வாய்ப்புகள் பெருகியதை வைத்து, இது நல்லது என்றே நானும் கருதினேன்!

இத்தனை வருடங்களில், தகவல் தொழில்நுட்பம் என்பது 'மால்'களில் புழங்கும் ஓர் உயர்மத்திய வகுப்பின் ஜனத்தொகையை பெருக்கியுள்ளது.  இதில் தவறு ஒன்றும் இல்லை என்றாலும், இதனால் பெங்களூரின் உண்மையான அறிவுஜீவித்தனத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சிந்திக்கத் தக்கது. 

கெட்டிக்கார மாணவர்கள் 20 வயது ஆவதற்கு முன்னமே, IT குறித்து சிந்திக்கத் தொடங்குவது, அதனால் சுலபமாக பணம் ஈட்ட முடியும் என்பதால் மட்டுமே!  இதனால், பல அறிவாளிகள் தங்கள் அறிவுத் திறத்திற்குக் கீழான பணியை மேற்கொள்கிறார்கள்.  அவர்களும் கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளிகளைப் போன்றவர்கள் தான்!

இத்தகைய சூழல் இந்தியாவுக்கு ஏற்றதா ? அனைத்துத் துறைகளிலும் - திறமையான கவிஞர்கள், நல்ல பொருளாதார நிபுணர்கள், வரலாறு வல்லுனர்கள், சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என்று - தேவையான அளவில் திறமை மிக்கவர்கள் இருத்தல் அவசியம்.  தகவல் தொழில்நுட்பத்தில் செழிக்கும் இந்தியாவில், கணினிவியலில் வருடத்திற்கு 25 பேரே டாக்டர் பட்டம் பெறுவது பெரிய முரண் இல்லையா?

தகவல் தொழில்நுட்பத் துறை முதலாளிகள் ஆரம்பத்திலேயே தங்கள் பணி மையங்களை ராமநகரம் (பெங்களூரிலிருந்து 40 கிமீ) போன்ற டவுன்களில் திட்டமிட்டு இருக்க வேண்டும், தகவல் தொழில்நுட்ப சாட்டிலைட் நகரங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.  அதை விடுத்து, அவர்கள் அனைவரும் பெங்களூருக்கு உள்ளேயே நிலத்தை வளைத்துப் போடவே விரும்பினர்!  அது போலவே, அவர்களுக்கு நிலம் கிட்டியும், அது போதவில்லை என்று புகார் வேறு கூறுகின்றனர்!

சாலைகள் சரியில்லை என்று ஒரு புகார், ஆனால் எதற்காக அவர்களுக்கு வேண்டி இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று புரியவைல்லை,  அவர்களது சமூகப் பொறுப்பை அவர்கள் சரியாக நிறைவேற்றாதபோது !  இவ்வளவு பணம் பண்ணும் இந்த IT முதலாளிகள், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் அல்லது ஹார்வர்ட் போன்ற ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்திருந்தால், அவர்களால் ஏற்பட்ட மற்ற பிரச்சினைகளுக்கு ஈடு செய்வது போல அமைந்திருக்கும்!

IT துறையில் பணி புரிபவர்கள் கொழிப்பதால், எனக்கு என்ன பயன், நானும் விப்ரோ அல்லது இன்போசிஸ் போன்ற நிறுவனத்தில் வேலை செய்யாத பட்சத்தில் ?  நாம் (மக்கள்) அவர்களுக்கு நிறைய கொடுத்திருக்கிறோம், பதிலுக்கு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம் !

நமது சமூகம் உருவாக்கியிருக்கும் (IT துறையைச் சார்ந்த) ரோல் மாடல்களும், முன்மாதிரிகளும், பெங்களூரின் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், நமது வாழ்வியல் மதீப்பீடுகளையும் (values) சேர்த்தே சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் !!!!!  நம் மக்கள், உழைப்புடன் கூடிய மேதமைக்கு (scholarship) மரியாதை தந்த காலம் போய்விட்டது.  பணமும், வணிகமும் நம்மை ஆக்ரமித்து விட்டன.

தகவல் தொழில்நுட்பத்தால் நமது அடிப்படை மதிப்பீடுகளுக்கு ஆபத்து தொடருமானால், பெங்களூரையும் எரிக்க வேண்டும், தகவல் தொழில்நுட்பத்தையும் எரிக்க வேண்டும் !!!

நன்றி: அவுட்லுக்

பி.கு: நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிந்தாலும், CNR ராவ் அவர்கள் கூறியுள்ள பெரும்பாலான கருத்துக்களோடு எனக்கு ஒப்புதலே என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன் !

எ.அ.பாலா

90 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

வவ்வால் said...

ஆஹா கொளுத்திப்போட்டுட்டிங்களே தல, உங்களை கற்றது தமிழ் ஹீரோனு சொல்லிடப்போறாங்க :-))

cnr.ராவ் சொல்வதில் தவறில்லை தான், உண்மையான அறிவு சார் வளர்ச்சியை கணினி வேலைகள் தடுக்கிறதுனு முன்னரும் யாரோ சொன்னாங்க.ஈ அடிச்சான் காபி வேலைத்தான் கணினி துறையில் நாம் செய்கிறோம். எனவே இதை நினைத்து பெருமைப்பட்டுக்கொள்ள எதுவும் இல்லை தான்.காசு கிடைக்குதுனு சந்தோஷம் வேணா பட்டுக்கலாம்.

இராம்/Raam said...

என்னத்த சொல்ல?? அவரு சொன்னது எல்லாம் உண்மைதான்..... :(

ச.சங்கர் said...

தகவல் தொழில் நுட்பம் திரட்டித்தந்த பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயில் நிறைய அரசாங்கத்திற்கும் வரியாக போயிருக்கிறதுதானே? அதை சரியான முறையில் பெங்களூருவில் உபயோகப் படுத்தியிருந்தால் இந்த நிலை ஏன் வரப் போகிறது ?

இந்தக் கட்டுரை (C N ராவின்) முன்னேற்றத்தினால் (அசுர வளர்ச்சியின் by product- ஆக) ஏற்பட்டிருக்கும் அவலத்தை மட்டும் ஒரு தலைப் பட்சமாக சாடியுள்ளதால் ஏற்புடையதாகத் தோன்றவில்லை :)

வவ்வால்
பாலா தாடி வைத்திருந்த போது கிட்டத்தட்ட கற்றது தமிழ் கதாநாயகன் போலத்தான் இருப்பார் :)

A Simple Man said...

இன்று பெங்களூர். நாளை.... ???

கஷடம்தான் :-((

-அபுல்

கருப்பன் (A) Sundar said...

பெங்களூர் கண்டிருப்பது வளர்ச்சியல்ல வெறும் வீக்கம்!!!

ஓகை said...

அவர் சொல்லும் கருத்துகள் ஏற்புடையவை அல்ல. பெங்களூருவின் அதீத வளர்ச்சிக்கு இணையான செயல்பாடு அரசிடம் இல்லை என்பது மட்டுமே உண்மை. தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கூடியிருப்பது அவ்வூருக்கு கூடுதல் வளர்ச்சியே அன்றி அறிவு நகரம் என்ற பெருமையைக் குறைத்து அது பெறப்பட்டதல்ல. பெங்களூரு இன்றைக்கும் ஒரு அறிவு நகரம் தான்.

உண்மையில் உண்மையான அறிவுசார் வளர்ச்சியை தகவல் தொழில்நுட்பம் வளர்த்தே வருகிறது. மென்பொருள் சாராத துறையென்று ஏதும் இல்லை என்ற நிலையை நோக்கி உலகம் விரைந்துகொண்டிருக்கிறது.

மணியன் said...

CNR ராவின் வருத்தமும் கவலையும் உடன்படக்கூடியதே.
//தகவல் தொழில்நுட்பத்தில் செழிக்கும் இந்தியாவில், கணினிவியலில் வருடத்திற்கு 25 பேரே டாக்டர் பட்டம் பெறுவது பெரிய முரண் இல்லையா? // என்ற அவரின் கேள்வி இளைஞர்கள் தங்கள் சிந்திக்கும் வயதில் சம்பாதிக்கப் போவதன் அவலத்தை வெளிப்படுத்துகிறது. இனி நமது இளைஞர்கள் business analyst ஆக இருப்பார்களே தவிர சர் சிவி ராமன்களாக இருக்கப் போவதில்லை என்பது இநதிய அறிவியலுக்கு வீழ்ச்சிதான்.
ஐடியின் அபரிமித சம்பளம் மற்றதுறைகளின் சமச் சீரான வளர்ச்சியை பாதிப்பது வருங்காலத்திற்கு நல்லதல்ல.கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளை பாதிப்பது போல :(

கல்வெட்டு said...

தவறாகச் சொல்கிறீர்கள். நாரயணமூர்த்தி என்ற ஒரு தொழிலதிபர், நிறையப் பணத்தை Cornell பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் துறைக்கு கொடுத்துள்ளார். Cornell பல்கலக்கழகம் இந்தியாவிலா இருக்கிறது என்று கேட்கக்கூடாது.

Narayana Murthy as a Cornell Trustee
http://www.kamalsinha.com/iit/people/narayana-murthy/cornell.html

enRenRum-anbudan.BALA said...

வவ்வால்,
கருத்துக்கு நன்றி.
//உண்மையான அறிவு சார் வளர்ச்சியை கணினி வேலைகள் தடுக்கிறதுனு முன்னரும் யாரோ சொன்னாங்க.ஈ அடிச்சான் காபி வேலைத்தான் கணினி துறையில் நாம் செய்கிறோம்.
//
CNRR சொல்வதில் நிறைய உண்மை இருக்கிறது, அமெரிக்கருக்காக பொட்டி தட்டுவதில் எந்தப் பெருமையும் இல்லை, என்ன, துட்டு கிடைக்கிறது, அஷ்டே ! எனது வன்பொருள் வடிவமைப்புத் (hardware design) துறை, மென்பொருள் பணியை விட சற்றே பரவாயில்லை என்பது என் எண்ணம் !!!

இராம்,
வாங்க, நன்றி.

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
கருத்துக்கு நன்றி.

//தகவல் தொழில் நுட்பம் திரட்டித்தந்த பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயில் நிறைய அரசாங்கத்திற்கும் வரியாக போயிருக்கிறதுதானே?
//
IT மக்கள் மட்டுமல்ல, அரசு அலுவலர்கள் கூடத் தான் வரி செலுத்துகிறார்கள். இவர்களால், சாமானியரின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது. (அநியாயமான) ரியல் எஸ்டேட் விலை ஏற்றத்திற்கு IT ஆட்களே முக்கியக் காரணம். (சாதாரண) அரசு வேலையில் இருக்கும் ஒருவர், சொந்தமாக பிளாட் (Flat) ஒன்றை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு விலை ஏறிக் கிடக்கிறது. இவர்களால் ஏற்பட்டுள்ள சமூகச் சீர்கேடுகள் அதிகம் என்பது என் கருத்து.

//வவ்வால்
பாலா தாடி வைத்திருந்த போது கிட்டத்தட்ட கற்றது தமிழ் கதாநாயகன் போலத்தான் இருப்பார் :)
//
இப்போது முடி நரைத்து விட்டதால், தாடியெல்லாம் வைக்க முடியாது :)

அபுல், கருப்பன்,
கருத்துக்கு நன்றி.

enRenRum-anbudan.BALA said...

ஓகை,
வாங்க.

//உண்மையில் உண்மையான அறிவுசார் வளர்ச்சியை தகவல் தொழில்நுட்பம் வளர்த்தே வருகிறது.
//
மென்பொருள் வடிவமைப்புச் சேவை (software design services) அறிவுசார் வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள முடியாது !!! அடிப்படை ஆராய்ச்சிக்கு (fundamental research) நம் நாட்டில் மதிப்பு கிடையாது. தகவல் தொழில் நுட்பத்தால் நாம் முன்னேறி விட்டோ ம் என்று கூறுவது, பிஜேபியின் "India Shines" campaign போலத் தான் :(

enRenRum-anbudan.BALA said...

மணியன்,
//இனி நமது இளைஞர்கள் business analyst ஆக இருப்பார்களே தவிர சர் சிவி ராமன்களாக இருக்கப் போவதில்லை என்பது இநதிய அறிவியலுக்கு வீழ்ச்சிதான்.
ஐடியின் அபரிமித சம்பளம் மற்றதுறைகளின் சமச் சீரான வளர்ச்சியை பாதிப்பது வருங்காலத்திற்கு நல்லதல்ல.கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளை பாதிப்பது போல :(
//
IT துறையால் ஏற்பட்டுள்ள முக்கியப் பிரச்சினையை சரியாக கணித்துக் கூறியுள்ளீர்கள், நன்றி.

enRenRum-anbudan.BALA said...

கல்வெட்டு,
தகவலுக்கு நன்றி. ஏதோ ஒரு முடிவோட வந்திருக்கிறீர்கள் போலத் தெரிகிறது :)
நீங்கள் சுட்டிய கட்டுரையில் கூறியிருக்கிற,
"Nagawara Ramarao Narayana Murthy like his divine wife Sudha Murthy does strongly believe in giving. Giving speeches, that is."
என்பது தெளிவாகப் புரிகிறது ;-)

எ.அ.பாலா

said...

nalla pathivu ....

ஓகை said...

அரபுநாடுகளுக்கு எண்ணெயைப் போல் இந்தியாவுக்கு மென்பொருள் தயாரிப்பு என்ற ஒரு ஒப்பீடு கூறப்படுவதுண்டு. இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆனால்,

நம் நாட்டில் பல நிறுவனங்கள் மென்பொருள் சார்ந்த மேலான்மைக்கு முக்கியத்துவம் அளிக்கக் தொடங்கிவிட்டன., தனித் தேவைகளுக்கான மென்பொருட்களுக்கு(customised software) ஒரு வளரும் சந்தை இருக்கிறது. இச்சந்தையின் தேவையை அளிப்பதற்கும் சிறிய மற்றும் பெரிய மென்பொருளாளர்கள் தோன்றிய வண்ணம் இருக்கிறார்கள். ஏற்றுமதிக்கான மென்பொருள் சந்தையுடன் ஒப்பிட்டால் இது இப்போதைக்கு மிகச்சிறியது என்றாலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை நான் முக்கியமாகக் கருதுகிறேன். மென்பொருள் செய்வதும் வெளிநாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் நிரலி எழுதுவதும் அறிவு சாராதவை என்பதுபோல் சொல்லப்படும் கருத்துகள் நிச்சயமாக ஏற்புடையவை அல்ல. மேலும் அறிவாற்றல் பெருகித் தழைக்க மென்பொருள் போன்ற சிறந்த கருவி ஏதும் இல்லை. வன்பொருள் துறை போல் உற்பத்தி சாராமல் அறிவையும் பயிற்சியையும் மூலதனமாகக் கொண்டிருக்கும் மென்பொருள் துறையை அறிவிலிருந்து அந்நியப்படுத்தி வாதிப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தியா இயல்பாகவே ஒளிரும் பொற்குடம். இடையில் அடைந்த அழுக்கைத் துலக்கத் தொடங்கியபோது தோன்றிய பொன்னொளி கண்டு உணர்ச்சி வயப்பட்டு சொல்லிய சொற்கள்தாம் "India Shines".

K.R.அதியமான் said...

////IT துறையில் பணி புரிபவர்கள் கொழிப்பதால், எனக்கு என்ன பயன், நானும் விப்ரோ அல்லது இன்போசிஸ் போன்ற நிறுவனத்தில் வேலை செய்யாத பட்சத்தில்///

Baala,

They and the companies pay huge amounts of taxes every year which are the main source of income for govts to spend on welfare, infrastructure and other programs.
And the foreign exchange they earn is used to finance our vital imports. (remember the years until 1991 when we had to beg and borrow from IMF for dollars).

a study says, for every job created in IT and ITeS, 12 jobs in downstream are created like drivers, plumbers, caterers, electricians, construction workers, etc. the disposable income of IT people are usually spent in buying dress, food, atuomobiles, etc which create more jobs and sales tax in other industries like textiles, retails, auto industry and so on.

It is the govt that failed to spend its huge revenue properly and without corruption to improve the city and infrastruture. the amounts exchanged in bribes in govt contracts for road works, etc are astronomical. It is not correct to blame the IT cos or empolyees for all this mess.

IT cos do fund institutions of higher learning. SSN engg college in Chennai is an excellent e.g ; promoted by HCL, it is deemed better than GCE or GCT now.
many IT cos have inhouse training and PG sponsored programs. it will evolve by itself and no need to preach what is required or should be done by them.

வவ்வால் said...

"Among the Indian private companies paying corporate tax to government, Tata Steel emerged as the leader with a share of 5.75 per cent amounting to Rs 8,426.76 crore and recording a growth rate of 22 per cent in 2006-07, the study claimed.

Tata Tea is the second largest taxpayer accounting for two per cent share at Rs 3,037.54 crore, registering a 28 per cent growth rate in the period analysed.

Among the Aditya Birla Group of Industries, Hindalco was the highest payer of tax revenue to the Government as it contributed 0.86 per cent to total tax kitty of the Government. With a growth rate of 34 per cent from the previous fiscal, its contribution was Rs 1,284.14 crore and was sixth largest tax payer among the top 10 private companies.

Telecom major Bharti Airtel recorded 134 per cent growth in its profit tax payments ranking as the seventh largest taxpayer of Rs 1,262.33 crore, with a share of 0.86 per cent in total amount, the study added.

Larsen & Toubro, TCS and Wipro fall at eight, ninth and tenth positions respectively in the league of top 10 highest tax paying companies, the Assocham study further said."

இந்தியாவில் வரி செலுத்தும் தனியார் நிறுவனங்களை வரிசைப்படுத்தும் போது மென்பொருள் துறை முதலில் வரவில்லை என்பது இதில் இருந்தே தெரியும்.

கணினி நிறுவனங்களுக்கு நிறைய வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு இடம், மின்சாரம், குடி நீர் என அளிக்கும் போதும் பல சலுகைகள் அளிக்கப்படுகிறது.

மைக்ரோ சாப்ட் ஆந்திராவுக்கு வருகிறேன் என்று சொன்னதும் சந்திரபாபு நாயுடி 2000 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கியதும் அறிவீர்கள்.

தற்போது தான் it நிறுவனங்களுக்கு இலவச நிலம் அளிக்கவில்லை, ஆனால் இப்போதும் அவர்களுக்கு முன்னுரிமை, விலை சலுகை, என பல வசதிகள் அளிக்கப்படுகிறது.

அதே சமயம் டாடா கார் தயாரிப்பு நிறுவனம் பல இடர்களை சந்தித்தது. it தவிர மற்ற தொழில் ஆரம்பிப்பதும் சிரமம் இங்கே.

எனவே மென்பொருள் நிறுவனங்கள் தான் அதிகம் வரிக்கட்டுவதாக கதை எல்லாம் விட வேண்டாம் :-))

said...

//எனவே மென்பொருள் நிறுவனங்கள் தான் அதிகம் வரிக்கட்டுவதாக கதை எல்லாம் விட வேண்டாம் :-))//

மென்பொருள் நிறுவனங்கள் தான் அதிகம் வரி கட்டுவதகாக யாரும் சொல்லவில்லை. அவர்களும் நிறைய கட்டுவதாக தான் கூறப்பட்டுள்ளது. வவ்வால் காலையில் கண் தெரியவில்லையோ? இரவு படிக்கவும் ;-))

K.R.அதியமான் said...

Vavvaal,

but they still pay in billions.
comparitive figuures are..
are they crazy to pay even this amount ?
and what about foreign exchange earnings ? remember 1991 crisis when we were bankupt. all these Tatas were there even then. the govt gave tax breaks to encourage all export oriented industries for earing foreign exchange. now all income tax excemptions are no longer there for IT and EOU cos, as we have huge reserves.

say, why don't the govt close all IT cos and kick all the MNC IT cos out. so that people can live in peace and prospeitry again.

tax breaks are alos give to SSI, textile spinning mills and many other sectors. if there is any anomoly, the parliament can correct it. and SEZ tax breaks ?

வவ்வால் said...

இந்தியாவில் மிக அதிகப்பட்சமாக வரிக்கட்டிய மென்பொருள் நிறுவனம் tcs, amount= Rs. 9, 04.05 crore

அடுத்த இடம் விப்ரோ, அது கட்டிய வரிப்பணம்= Rs.765.2 crore

எனவே மற்ற மென்பொருள் அல்லாத துறைகள் தான் அதிகம் அரசுக்கு வருவாய் அளிக்கின்றன என்பது புரியும்.

வவ்வால் said...

அனானி,
//அவர்களும் நிறைய கட்டுவதாக தான் கூறப்பட்டுள்ளது. வவ்வால் காலையில் கண் தெரியவில்லையோ? இரவு படிக்கவும் ;-))//

நீங்க சொன்ன அந்த "அவர்களும்" என்று சொல்லவில்லை, "அவர்கள் மட்டுமே" என்ற ரீதியில் பின்னூட்டம் போட்டு இருக்கிறார். "huge amount" அல்ல அது, மொத்த வரியில் ஒரு சின்ன தொகை அது, அவர்கள் கட்டும் வரிக்கும் மேலான சலுகையை அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதால் தான் ராவ் போன்றவர்கள், ஏன் அவர்களுக்கு இன்னும் வசதி வேண்டுமா என்று கேட்கிறார், அதையே நானும் சொல்லி இருக்கேன் புரியுதா, கண்ணு தெரியலைனாலும் பரவாயில்லை, ஆனால் கருத்துக்குருடர்களா இருக்க கூடாது :-))
--------------------------------
அதியமான்,

அவர்கள் கட்டும் பணம் ஒன்றும் அத்தகைய பெரிய தொகை அல்ல.மொத்த வரி வருவாயில் ஒரு சின்ன பங்கு தான் அது.மேலும் கட்டிய வரியை விட அதிக பலனை அரசிடம் இருந்து வாங்கிக்கொண்டுள்ளார்கள்.

அன்னிய செலவாணி கையிருப்பு கிடைக்கிறது என்பதற்காக அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆட வேண்டுமா அரசு, சரி அப்போ அன்னிய செலவாணிக்கு பதிலாக இந்திய செலவாணியை அந்த நிறுவனங்கள் வாங்காமல் விட்டு விடப்போகிறதா என்ன?

மேலும் அன்னிய செலவாணி இருப்பு என்பது உள்நாட்டு வளர்ச்சிக்கு துரும்பளவும் பயன்ப்படாது என்பது தான் உண்மை. அதுக்குறித்து படித்துப்பாருங்கள்.

ரிசர்வ் என அதை அப்படியே அரசு பூட்டிவைத்துக்கொள்ளும். அவ்வளவே. எனவே மக்களுக்கு பலனே இல்லை. பல முறை நிதிவல்லுனர்கள் அரசு அன்னிய செலவானி கையிருப்பில் இருந்து பணம் எடுத்து வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிக்க வேண்டும் என்று ஆலோசனை அளித்துள்ளார்கள், அரசு அதைக்கண்டுக்கொள்வதே இல்லை.

said...

//இந்தியாவில் மிக அதிகப்பட்சமாக வரிக்கட்டிய மென்பொருள் நிறுவனம் tcs, amount= Rs. 9, 04.05 crore

அடுத்த இடம் விப்ரோ, அது கட்டிய வரிப்பணம்= Rs.765.2 crore

எனவே மற்ற மென்பொருள் அல்லாத துறைகள் தான் அதிகம் அரசுக்கு வருவாய் அளிக்கின்றன என்பது புரியும்.//

கணக்கு அவ்வளவு எளிதல்ல. IT கம்பெனியில் வேலை செய்பவர்களின் சம்பளத்தில் எவ்வளவு வரி பிடிக்கப்படுகிறது என்பதையும் கூட்டி பார்க்க வேண்டும் ( மற்ற துறைகளிலும்தான் ). அப்பதான் IT துறையின் மொத்த வரி பங்கு தெரியும்.

said...

The IT industry has become the favourite whipping boy of the Left-liberal types
PRASANNA VISHWANATHAN

IN ITS SPECIAL issue on the eve of India's 60th Independence day The Hindu published one of Amartya Sen's typically laboured constructs, an essay purportedly on India's global attainments. Like in any of his other writings, Prof Sen prevaricated
ceaselessly to camouflage his profound predilection for Marxist dogmas. And it came as no surprise when the course of this essay was skilfully steered towards making a dubious claim of Kolkata being the 'safest' metropolis in the world.

The tacit message that Prof Sen conveyed was that the 'low rate of crime in Kolkata was attributable to the city being the citadel of Left-liberal intelligentsia' and, of course, the capital of the state ruled uninterrupted for more than three decades by the Communist Party of India (Marxist) or CPI(M), a formation largely held to ransom by its ideological Neanderthals and unelected apparatchiks.

Prior to his essay claiming Kolkata as the safest haven in planet earth, The Hindu had published the complete text of Prof Sen's speech to the National Association of Software and Service Companies (NASSCOM) that stood out for its Kennedy-esque exhortation to the Indian IT Industry. In that intelligently crafted speech Prof Sen used the timetested socialist stratagem of inducing guilt by focusing on societal externalities to give a clarion call to the IT industry to develop, in his own words, 'a sense of obligation' to the society. A defining feature of any socialist speechifying in today's India would involve a mandatory invoking of Nehruvian vision and through it attempt to usurp India's successes in fields as diverse as cricket and space research even if the linkage is at best tenuous or most times non-existent. In that NASSCOM speech, Prof Sen claimed that IITs were instrumental in scripting the growth of Indian IT industry.

This attempt to associate the IT success story with Nehruvian institution-building capabilities can be quickly debunked by pointing out that not many of those who pioneered the low-cost, offshore centric Indian IT emerged from the IITs. At the other end of the spectrum, analysis of the educational demographics of the foot soldier of the industry, the quintessential software programmer, would point to not less than 80 percent of them drawn from private engineering colleges and science colleges (several of them based in South India). Ashish Arora and Surendrakumar Bagde from Carnegie Mellon University analysed "the relationship between software exports and private engineering colleges from 1989 to 2003 in fourteen Indian states, which account for nearly 85 percent of the population and virtually all the software exports". Their study "The Indian Software Industry: the Human Capital Story" finds that "even after controlling for a variety of factors such as level of wealth and industrialisation, the leaders in software exports are those states which allowed pri-vate engineering colleges to open before 1992". Many shady political operators who quickly turned themselves as educational entrepreneurs deserve credit for pioneering the model of affordable technical education in South India. The proliferation of engineering colleges in South India churned out thousands of bright engineers who were gleefully lapped up by well-oiled recruitment machinery of the top Indian IT companies.

Of course it goes to the great credit of the Indian IT industry that it invested in top-class technical training infrastructure to leverage the best out of these bright young minds. It also helped that the rent-seeking bureaucracy and patronagedispensing political class who had effortlessly established stranglehold over the old economic order, could not figure out quickly enough the modus operandi to maintain sway over the emerging IT industry.

It is nobody's case that the IT industry should be oblivious to the social context of our time and operate in splendid isolation. There are several reasons for Indian corporations to develop a deeper understanding of societal forces and formulate appropriate strategies to respond to them. But framing it as the need to develop corporate social responsibility as some kind of thanksgiving to Nehruvian munificence is wrong.

Outlook, a popular Indian weekly recently turned very complex issues involved in the rapid urbanisation of Bangalore in to impending 'class' war that pitting the 'rich' IT class against the 'poor' other sections of the society. According to the magazine's recent cover story on Bangalore's troubled relationship with IT industry, reports of physical assaults on city's IT professionals are declared as early signs of a 'class war'.

Even more appalling than the lurid approach adopted by the magazine was an accompanying piece to the cover story, a vitriolic outpouring against the IT Industry by C N R Rao, the scientific advisor to prime minister. Dr Rao's credentials as scientist are outstanding but it is deeply troubling to note that people with such narrow outlooks occupy crucial positions in scientific establishment. The inflammatory tone adopted in Dr Rao's essay ("If IT Is Going To Take Away Our Values, Burn Bangalore,Burn IT") was hardly distinguishable from demagoguery unleashed by a rabble-rousing politician.

The eminent scientist, it appeared, would not too perturbed if marauding mobs burn down IT campuses in to safeguard the great 'culture' of Bangalore from the 'assault' of the IT professionals.

If the likes of Dr Rao are typical products of the intellectual and scientific culture of the bygone era in Bangalore that is now apparently facing threat with the surfeit of 'cyber coolies', one cannot be faulted for not bemoaning the demise of that 'culture'. The use of the word coolie as a pejorative itself demonstrates a contempt for the dignity of labour.

The disturbing trend of pitting IT professionals against rest of the society has become a mainstay of the Left-liberal commentariat as it battles becoming irrelevant in today's India. But turning the IT industry into a bogey and blaming it for the crumbling infrastructure obfuscates the real reason for mess that urban India find itself in—a massive failure of governance made worse by a reluctance to purposefully press ahead with further liberalisation.

Meanwhile, the Union health minister found time—amid his vengeful campaign against a medical stalwart—to make reproachful generalisations on lifestyle of IT professionals. And a recent Tamil movie stereotyped the IT/BPO professionals in the most disparaging manner possible. They were portrayed as errant individuals with aberrant habits.

The IT industry is woefully ill equipped to counter this campaign of calumny, since its till not found its political feet. As Pragati has previously argued, the industry has failed to invest in "thinktanks, the public policy schools, social science research endowments and sponsored professorships". Instead, the enthusiasm for concessional real estate and efforts to extend tax breaks has left the IT industry deeply compromised. It is extremely reluctant to take a principled position on any issue of consequence, not even on the cynical social engineering policies that UPA government continues to advocate for the private sector. Many of these policy formulations if turned in to law might damage foundational principles of meritocracy that has served the IT companies well.

Prasanna Viswanathan is a IT professional based out of
Bangalore. He blogs at Benched@Bangalore (prasannavishy.blogspot.com)

Published in Pragati Issue No.10 Jan 2008
http://pragati.nationalinterest.in/wp-content/uploads/2008/01/pragati-issue10-january2008-communityed.pdf

வவ்வால் said...

அனானி ,

//கணக்கு அவ்வளவு எளிதல்ல. IT கம்பெனியில் வேலை செய்பவர்களின் சம்பளத்தில் எவ்வளவு வரி பிடிக்கப்படுகிறது என்பதையும் கூட்டி பார்க்க வேண்டும் ( மற்ற துறைகளிலும்தான் ). அப்பதான் IT துறையின் மொத்த வரி பங்கு தெரியும்.//

அறிவுக்கொழுந்தாக இருக்காரே , அப்போ மற்ற எந்த நிறுவன ஊழியரும் வரிக்கட்டுவதே இல்லையா :-))

அதை எல்லாம் யார் கணக்கிடுவது, அதனால் கம்பெனி டு கம்பெனி என வரி விகிதம் ஒப்பிடுவதே சரியாக வரும்.
----------------------
//now all income tax excemptions are no longer there for IT and EOU cos, as we have huge reserves.//

அதியமான்,
நான் சொல்லி இருக்கும் தொகை எல்லாம் என்ன போன நூற்றாண்டு தொகையா, எல்லாம் இந்த நிதி வருட முடிவின் படி வந்த தொகை. எனவே வரி விலக்கு போய்டுச்சு, அவங்க கூடுதல் கட்டுவாங்க என்றெல்லாம் யூகம் செய்யவேண்டாம். அவங்க கட்டுற அதிகப்பட்ச வரியே இதான்!

enRenRum-anbudan.BALA said...

கருத்து சொன்ன நண்பர்கள் ஓகை, அதியமான், வவ்வால், அனானிஸ் அனைவருக்கும் நன்றி.

என்னளவில், தகவல் தொழில்நுட்ப அசுர வளர்ச்சியால், நாட்டுக்கு பெரிய பயன் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை ! ஒரு சிறிய சதவிகிதத்தில் உள்ள நடுத்தர மக்கள் 'உயர் நடுத்தர' மக்கள் ஆகியிருக்கலாம் ! இந்த IT துறை வளர்ச்சி (எல்லாரும் குறிப்பிடும் IT Boom!), அனைத்துத் தரப்பு மக்களின் நிலை உயர்வுக்கு வழி வகுக்கவில்லை என்பது தான் யதார்த்தம்.

எல்லாருக்கும் இல்லாத பொறுப்பு IT துறையினருக்கு மட்டும் ஏன் வர வேண்டும் என்று சிலர் கேட்கலாம். IT கம்பெனிகள் பலவித சலுகைகளை அரசிடமிருந்து எதிர்பார்ப்பதால் தான் இந்தக் கேள்வியே (அவர்களால் சமூகத்திற்கு என்ன ஆதாயம்?) எழுகிறது. இவர்கள் அந்தந்த மாநில அரசோடு சேர்ந்து (முனைந்து) செயல்பட்டால் தான் இவர்கள் கேட்கும் (10 ஆண்டுகளில் ஏற்படுத்த வல்ல) infrastructure development-ஐ (இவர்கள் சௌகரியத்திற்காக 3 ஆண்டுகளில்) கொண்டு வர முடியும் !!!!!

எ.அ.பாலா

K.R.அதியமான் said...

////என்னளவில், தகவல் தொழில்நுட்ப அசுர வளர்ச்சியால், நாட்டுக்கு பெரிய பயன் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை ///


the following are the benefits of IT boom in India :

1.Employment generation for some 12 lac IT pros who get good salaries. (Baala, remember your govt service days and your present job status)

2.Indirect employment generation in the ratio of 12 jobs for 1 IT job like drivers, caterers, electricians, plumbers, cleaners, office admin, HR, training, construction, etc

3.The IT induustry earns foreign exchange to the tune of several billion dollars which stenghthens our rupee thereby making imports cheaper than otherwise. (mainly petro product imports and vital and rise in these prices result in direct price rise across the board)

4. IT cos pay billions of income and service taxes. These 12 lac people directly employed by IT co pay more income tax than any other group of professionals.

5. Ripple effect : The surplus income of IT cos and IT employees are channelised into savings and capital formation which helps more growth and employment generation in many sectors. The funds invested in IPOs create more industry and employment and taxes and so on. The disposable incomes spent by these people creates new demand for many products and services like hotels, entertainment, garments, retail, jewellery, cosmetics, pharma, tourism and travel services and iinumerable other sectors. all these spendings create more demand and jobs and tax revenue in the form of service, excise and sales tax. this is called the trickle down effect. For e.g : there is relatviely less relative poverty in Bangalore when compared to say
Raichur which has no IT cos.

6.Charity by IT cos and IT employees. lacs of IT people donate for many causes (incl the excemplery example set by this blog owner. hat's off to you Baala) and many It cos have inhouse foundations (like Infosys Foundation) which donate crores annually. lot of good work is done everyday.

7.IT boom has been the base for this cheap telecom and many other related sectors which create more employment and cheap communications. For e.g banking, rail ticketing and thousand other transaction costs are now only a fraction of old days and new avenues for improved efficiceny and transparency (e-governance) are opening up. Stock market data and agricultural commodity price data are now easly and ranparetly available. (MCX echange, ITCs e-choupals, etc have ransformed millions of lives of farmers and rural people). more downstream effects. it is noweasy to tract info and data and find good and cheap sources of goods, services and employment across the globe.

All these above 'benefits' would not be there but for the boom of IT cos. Pls remember the terrible days of 70s and early 80s when there was even more acute unemplyment and poverty when compared to now. Suppose if IT boom didn't occur in India and all these cos flourished in neigbouring nations instead, would we all be better off ?

Lastly, the central govt and many state govts compete with each other to draw IT cos to their states with land, tax breaks, power, infrastructue, etc. Even the communist W.Bengal is eager for IT cos to set up shop in Calcutta. Are they foolish, crazy or dishonest in giving incentives ? Why in the hell do they offer all these in the first place. these govts are elected by the people and answerble to queries like this post. The answer is it ultimately benefits the state and its economy in multi-various ways. But for Chandrababu Naidu, Hyderabad would not be in the map of IT industry in India. Now next, to Bangalore, Chennai, NCR and Mumbai, Hyderabad too is fast growing due to the vision and ground wor done by C.Naidu. Would Hyderabad and AP be better off if he had not taken this intiative ?
Pls compare Hyderabad with its olden days of 70s or present Patna ? which is preferable.

sure the growth is not even. but the reality is something is better than nothing. we had nothing before and there was more poverty, unemployment, less tax revenue and welfare spending until 90s..

said...

//அறிவுக்கொழுந்தாக இருக்காரே , அப்போ மற்ற எந்த நிறுவன ஊழியரும் வரிக்கட்டுவதே இல்லையா :-))//
(மற்ற துறைகளிலும்தான்) என்று சொன்னதை பார்க்கவில்லையா? கண்ணு தெரியுதா

//அதை எல்லாம் யார் கணக்கிடுவது,//
அப்படி சொல்லி தப்பிக்க முடியாது.

// அதனால் கம்பெனி டு கம்பெனி என வரி விகிதம் ஒப்பிடுவதே சரியாக வரும்.//
சரியாக வராது அரைகுறை கணக்கு அது. கருத்துக்குருடர்களா இருக்க கூடாது என்று சொல்லிவிட்டு, கணக்கு குருடனா இருந்தா எப்படி?

//அவர்கள் கட்டும் வரிக்கும் மேலான சலுகையை அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதால் தான் ராவ் போன்றவர்கள்,//
அவர்களின் சமுதாய பங்கை மிக குறைவாக மதிபிட்டுளீர். அவர்களுக்கு கொடுத்த சலுகைகளை விட அவர்களினால் மக்கள் அடைந்த நன்மை மிக அதிகமே. இல்லன யவன்யா அந்த பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்திருப்பான்? (அதில் பத்து லட்சம் குடும்பங்களும் உண்டு)

//IT கம்பெனிகள் பலவித சலுகைகளை அரசிடமிருந்து எதிர்பார்ப்பதால் தான் இந்தக் கேள்வியே //
மற்ற துறையினருக்கும் சலுகைகள் உண்டு, என்ன IT கம்பெனிகள் கொஞ்சம் கூட கொடுத்துவிட்டனர், அதனால் அவர்களால் சமூகத்திற்கு நன்மையே கிடையாது என்று சொல்வது அபத்தம். சலுகைகளுக்காக மற்ற துறைகளை கடுகளவுகூட குறை கூறியதை நான் இன்னும் எங்கும் பார்க்கவில்லை

எல்லா துறைகளில்லிருந்து எல்லா சலுகைகளையும் விலக்க வேண்டும் என்று ஏன் யவரும் கேட்க மறுக்கின்றனர் ...
அப்படி இருப்பவர் எல்லாரும் கருத்துக்குருடர்களா? ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
சாலைகள் சரியில்லை என்று ஒரு புகார்,
==>
அதானே. ஐடித்துறை நிறுவனங்களே சொந்தமா சாலைய அமைச்சுக்க வேண்டியதுதான. இல்லாட்டி ஐடித் துறைக்காரங்களுக்கும், (நிறுவனங்களூக்கும் ஊழியர்களுக்கும்) அதிக வரி.

ஐடித் துறையால் நாட்டுக்கு பெரிய நலன் கிடைக்கும்னு யாரும் அத(கம்பெனிகள) ஆரம்பிக்கவோ,அதில் சேரவோ இல்ல. அரசுக்கு ஐடித் துறையால் பலன் ரொம்ப இல்லைனா, ஐடித்துறைக்குக் கொடுக்கும் சலுகைகளை நிறுத்திக்கொள்ளலாம். அடிக்கடி செய்திகளில் வருவது - "மத்திய நிதியமைச்சகம் எவ்வித சலுகைகளையும் எவ்வித நிறுவனங்களுக்கும் கொடுக்கக் கூடாது என்று பரிசீலனை".

அரசாங்கத்தால் இவ்வளவு பேருக்கு வேலை(கூலி வேலை) வாய்ப்பை உருவாக்க முடியாது. அந்த அளவில்தான் இதை எடுத்துக்கணும். மத்த துணைத்தொழில்களும் வளருது.
சாதரணமா ஐடித்துறைலதான் வேலைக்கு "வாக்-இன்" நேர்காணல் கேள்விப்பட்டிருப்பீங்க. இப்ப, மற்ற (சிவில்) துறைக்கும் அது வந்துட்டது.

அத விடுத்து ஐடித்துறையால் எல்லாமே சீரழிந்துபோய்ட்டுன்னு கூப்பாடு போடறது சரியல்ல.

எந்த புது துறை வந்தாலும் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.

-பொட்டி தட்ரவன்(மென்பொருளாளன்)

said...

This is because of the past socialistic syndrome. Just throwing stone to sucessful person. Nothing more than else.
In earlier, they blame Tata, Birla and reliance. Now, IT companies, thats all.
Even if there is no water supply in the house, then they will start to blame IT companies.
Whatever mentioned, it is not duty of the IT companies. It is duty of the government. Blame burecrat inefficency and political corruption.
If you want to produce more PhDs, increase salary structure. Automatically, people will come.
Take Gujarat, all place are SEZs. any problem will arise. But at the same time, west bengal case is totally different. why?. Because political leadership.
If you say, for IT companies, govt. giving some benefits. All sectors from agri to textile also. Okay. if so, what govt. going to do?. Do something constructively in the infrastructure area.
If you feel wrong, why dont resign your job and take some other socially benefitted job.

வவ்வால் said...

அனானி,

//கணக்கு குருடனா இருந்தா எப்படி?//

நீங்க சொல்றதுல எதாவது லாஜிக் இருக்கா, அடைப்புக்குறிக்குள் போட்டதுக்கும் சேர்த்து தானே மற்றவர்களும் வரிக்கட்டுறாங்க , கணக்கிட்டா சிக்கலாக வரும், அதை விட மற்ற துறை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகம் எப்படி பார்த்தாலும் அவர்கள் வரி கட்டும் தொகை ஒட்டுமொத்தமாக கூட இருக்கும்.

இந்திய ரயில்வேல மட்டும் சுமார் 12 லட்சம் பேர் வேலை செய்வாங்க, ஸ்டேட் பாங்கிற்கு மட்டும் 12000 சொச்சம் கிளைகள் இருக்கு, இவர்கள் எண்ணிக்கை முன்னால it ஊழியர்கள் எண்ணிக்கை சமம் ஆகாது, எனவே தான் உங்களுக்கு சாதகமாகா அவர்களை கணக்கில் எடுக்க வேண்டாம் என்கிறேன். எடுத்தால் it மொத்த வரி பங்களிப்பு ரொம்ப சின்னதா போய்விடும் :-))

ஆனால் இங்கே ஏன் கார்ப்போரேட் களை மட்டும் head to head பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றால்,

தனி நபர் வரி விதிப்பு விகிதம் வேறு, கார்ப்போரேட் வரி விகிதம் வேறு.

ஒரே விகிதத்தில் இருப்பவர்களை தான் ஒப்பிட முடியும். புரிகிறதா?

//மற்ற துறையினருக்கும் சலுகைகள் உண்டு, என்ன IT கம்பெனிகள் கொஞ்சம் கூட கொடுத்துவிட்டனர், அதனால் அவர்களால் சமூகத்திற்கு நன்மையே கிடையாது என்று சொல்வது அபத்தம். சலுகைகளுக்காக மற்ற துறைகளை கடுகளவுகூட குறை கூறியதை நான் இன்னும் எங்கும் பார்க்கவில்லை//

கொடுத்தை விட இன்னும் சலுகை வேணும் வேணும் கேட்கிறாங்களே அதனால் தான் குறை சொல்றாங்க!

மென்பொருள் துறைனு சொல்றிங்களே , tcs, wipro, infosys , solaris போன்றவர்கள் உருவாக்கிய மென்பொருள்கள் பெயரை சொல்லுங்க பார்ப்போம். அவர்கள் செய்வதெல்லாம் மென்பொருள் சேவை. நாளைக்கே அந்த வேலையை தரவன் வேறு இடம் பார்த்துட்டா இங்கே எல்லாம் ஓவர் நைட்ல வீட்டுக்கு போகனும்.

எனவே இதனை நம்பி ரொம்ப உள்ளப்போனாலும் ஆபத்து, ஆனால் உற்பத்தி துறையில் செய்யப்படும் முதலீடு நீண்ட கால பலன் தரும், அவ்வளர்ச்சி தேவை.

Unknown said...

ராவ் அவர்கள் சொல்றது ஞாயமாத்தான் படுது. நானும் அந்த மென்பொருள் துறையில் இருந்தாலும், சமுதாயத்தில் அது ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வைப் பார்த்தால் வருத்தம்தான் மிஞ்சும்.

என்னைப் பொருத்தவரை, மென்பொருள் துறை கூடிய சீக்கிரம் 'நிலைக்கு' வரக் கூடிய சாத்தியம் இருக்கு! அதுக்குள்ள, தூத்திக்கவேண்டியதுதான் :)

said...

//எனவே தான் உங்களுக்கு சாதகமாகா அவர்களை கணக்கில் எடுக்க வேண்டாம் என்கிறேன்.//

கணக்கில் எடுப்போம், அப்பதானே அவர்களின் மொத்த பங்கு சமுதாயத்தில் எவ்வளவு என்று தெரியும்.

//ஒரே விகிதத்தில் இருப்பவர்களை தான் ஒப்பிட முடியும். புரிகிறதா? //

விகிதம் இங்கு முக்கியம் இல்லை. அவர்களின் சலுகைகளுக்கு ஏற்ப அவர்களின் சமுதாய பங்கு எவ்வளவு என்பது தான் விவாதமே. I.T துறை சலுகைகள் பெற்றதை விட அவர்களின் சமுதாய பங்கு அதிகமே.

//மென்பொருள் துறைனு சொல்றிங்களே , tcs, wipro, infosys , solaris போன்றவர்கள் உருவாக்கிய மென்பொருள்கள் பெயரை சொல்லுங்க பார்ப்போம். அவர்கள் செய்வதெல்லாம் மென்பொருள் சேவை.//
மீண்டும் உங்கள் அறியாமை புலப்படுகிறது. ஒரே ஒரு உதாரணம் மட்டும் தருகிறேன், நீங்கள் உங்கள் வங்கியில் ATM பயன்படுத்தியது உண்டா அது பெரும்பாலும் ஒரு இந்திய கம்பெனியால்தான் நிறுவப்பட்டு இருக்கும்.
Infosys சின் வங்கி மென்பொருளின் பெயர் Pinnacle என்று நினைக்கிறேன், பல இந்திய வங்கிகள் இதை பயன்படுத்துகின்றன.
Solaris ஒரு Operating System, நீங்கள் சொல்லவந்தது Polaris என்று நினைக்கிறேன். Citibank India பயன்படுத்துவது அவர்களின் மென்பொருளே. wipro மென்பொருள் நிறுவனம் மட்டும் அல்ல அது soap, diaper, talcum powder, light bulb போன்றவறையும் தயாரிக்கிறது.

//அத விடுத்து ஐடித்துறையால் எல்லாமே சீரழிந்துபோய்ட்டுன்னு கூப்பாடு போடறது சரியல்ல.//
நன்றி சிவா..

ஓகை மற்றும் அதியமான் அவர்களுக்கும் நன்றிகள்..

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
வவ்வால் said
கொடுத்தை விட இன்னும் சலுகை வேணும் வேணும் கேட்கிறாங்களே அதனால் தான் குறை சொல்றாங்க!
==>
எந்தத் தொழில் பண்ரவனும் அவனுக்குள்ள சிரமங்களைச் சொல்லி சலுகை கேட்கவே செய்வான்.
அரசுக்கு அந்த சலுகைகளினால் எந்தப்பயனும் இல்லைனா, ஏன் அந்தச் சலுகைகளைக் கொடுக்கணும்?
<==
மென்பொருள் துறைனு சொல்றிங்களே , tcs, wipro, infosys , solaris போன்றவர்கள் உருவாக்கிய மென்பொருள்கள் பெயரை சொல்லுங்க பார்ப்போம்.==>

இந்த நக்கல்தான வேண்டங்கறது. என்னுடைய மேலே உள்ள கமெண்ட்டைப் பார்க்கவும். அதுதான் கூலித்தொழில் சொல்லியாச்சுல்ல.
நாங்க அடுத்தவங்களூக்குத்தான்(வெளிநாட்டுக்காரங்களுக்கு) மென்பொருள் செய்ய முடியும். எங்களூக்கு முடியாது, ஏன்னா,அது ரொம்ப விலையாகும்.கட்டுபடியாகாது.
[கட்டிடத்தொழிலாளி மத்தவங்களுக்கு வீடு கட்டிக்கொடுதாலும், தனக்குன்னு ஒரு வீடு கட்டற அளவுக்கு வசதி இருக்காது]

<==
நாளைக்கே அந்த வேலையை தரவன் வேறு இடம் பார்த்துட்டா இங்கே எல்லாம் ஓவர் நைட்ல வீட்டுக்கு போகனும். ==>
அப்படிங்களா? தகவலுக்கு நன்றி.
<==
எனவே இதனை நம்பி ரொம்ப உள்ளப்போனாலும் ஆபத்து, ஆனால் உற்பத்தி துறையில் செய்யப்படும் முதலீடு நீண்ட கால பலன் தரும், அவ்வளர்ச்சி தேவை.
==>
ஐடித்துறையில், எவ்வளவு அரசாங்கம் முதலீடு பண்ணியிருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க, எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும். அரசாங்கம், நிலம் தவிர என்னத்த கொடுத்தது? எல்லாம் தனியார் முதலீடுதான்.

வவ்வால் said...

அனானி,
//கணக்கில் எடுப்போம், அப்பதானே அவர்களின் மொத்த பங்கு சமுதாயத்தில் எவ்வளவு என்று தெரியும்.//

கணக்கில் எடுத்தா காணாமப்போய்டுவிங்க, ஏன் என்றால் மென்பொருள் துறையில இந்திய முழுக்கவே மொத்தமாக 10 லட்சம்பேருக்கு மேல இருக்க மாட்டாங்க, ஆனால் அவர்களை விட பல கோடி மற்ற துறை ஊழியர்கள் இருக்காங்க, சும்மா பினாத்தாம , கார்ப்பரேட் வரி என்னா வருதுனு பாருப்பா!


போலாரிஸ் என்பதற்கு பதிலாக சன் சோலாரிஸ் சொல்லிட்டேன், , ஆனாலும் கேட்க வந்தது இந்திய நிறுவனங்களின் மென் பொருள் உருவாக்கம் என்பதால், மற்றவை உடன் அது வருவது "odd man out " போல இருக்கும், அப்படி இல்லை ஒரு கம்பெனி பேரை தப்பா சொன்னாலும் மொத்தமாக தப்பு என்றால் , நான் வருத்தம் தெரிவித்துக்கொள்வதை தவிர வேறில்லை!

//I.T துறை சலுகைகள் பெற்றதை விட அவர்களின் சமுதாய பங்கு அதிகமே. //

அது என்ன சமுதாய பங்கு :-))

தெளிவா சொன்ன புரிஞ்சுப்போம்ல :-)) கொஞ்சம் அந்த சமுதாய பங்கை சொல்லிட்டுப்போறது!

அப்புறம் ஏற்கனவே சொல்லிட்டேன் ,சிட்டி பேங்க் ஆகட்டும் என்னவாகட்டும் அதுக்குலாம் பேரு மென்பொருள் சேவைனு, அதை எல்லாம் மென்பொருள் என்று சொல்லிக்காதிங்க, நான் சொன்னது , போட்டோ ஷாப், கோரல் டிரா, ஆட்டோ கேட், மாயா, விண்டோவ்ஸ், இதை எல்லாம் தான் மென்பொருள்னு, நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க? (உங்களுக்கு மென்பொருள் சேவைனா என்னா, மென்பொருள் பொது மக்களுக்காக என்னனு தனியா சொல்லனும் போல, ஆனால் இங்கே சிவா என்பவர் அது சரியா புரிஞ்சுக்கிட்டாரே எப்படி?)

விப்ரோ பலதும் தயாரிக்குதுனு எனக்கு தெரியாதா, டாடா கூட தான் டிரக், இரும்பு, உப்பு எல்லாம் தயாரிக்குது, ஒரு நிறுவனத்தின் மென்பொருள் அங்கத்தை மட்டும் கணக்கில் வைத்து சொல்றேன். சின்னபுள்ளத்தனமாக எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கனும் போல இருக்கே!(ஷேர்க்கு டிவிடெண்ட் தரும் போது கூட மென்பொருள்க்கு தனி , அது தயாரிக்கிற சோப் கம்பெனிக்கு தனினு தான் தறாங்க, மென்பொருள் நிறுவனத்தின் லாபத்தை எடுத்து சோப்பு தயாரிக்கிற கம்பெனி பங்கு தாரார்களுக்கு தர மாட்டாங்க அடிப்படை கூட தெரியாம பேச வருதே இந்த அனானி)
----------------------------------

சிவா,
//அரசுக்கு அந்த சலுகைகளினால் எந்தப்பயனும் இல்லைனா, ஏன் அந்தச் சலுகைகளைக் கொடுக்கணும்?//

அதனால் தான் அரசு கொடுத்த சலுகை போதும்னு இருக்கு, ஆனால் அரசு இன்னும் எங்களை கண்டுக்கலைனு அப்போ அப்போ பெரும் புள்ளிகள் புலம்புறாங்களே, அதனால் தானே ராவ் போன்றவர்கள் கொடுத்தது போதும் இனி புண்ணியம் இல்லை என்கிறார்கள்,

எப்படியோ பலன் இல்லைனா அரசு கொடுக்க கூடாதுனு உங்களுக்கே புரியுது, அது போதும்!

//இந்த நக்கல்தான வேண்டங்கறது. என்னுடைய மேலே உள்ள கமெண்ட்டைப் பார்க்கவும். அதுதான் கூலித்தொழில் சொல்லியாச்சுல்ல.//

நீங்க சரியா சொல்லிட்டிங்க,,ஒரு அனானி அதை ஒத்துக்கலை அதுக்கு சொன்னது தான் அது!


//ஐடித்துறையில், எவ்வளவு அரசாங்கம் முதலீடு பண்ணியிருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க, எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும். அரசாங்கம், நிலம் தவிர என்னத்த கொடுத்தது? எல்லாம் தனியார் முதலீடுதான்.//

நானும் அரசு முதலீடு செய்தது என்று சொல்லவில்லையே, தனியாரோ, அரசோ பொதுவாக அதிகம் இதில் உள்ளே போய்விடக்கூடாது என்றேன்!
அதாவது over dependant ஆகிவிடக்கூடாது என்ற பொருளில்.

அரசு நிலம் , மின்சாரம், குடிநீர், அதை விட ஆரம்பிக்க எந்த தடையும் இல்லை என்று சொல்வதே வளர்ச்சியை திசை திருப்பி விடும் என்பது தெரியாதா, மென்பொருள் நிறுவனம் ஆரம்பிப்பது எளிதுனு , அவன் அவன் விண்ணப்பித்து கடைசியில் தேக்க நிலையை உருவாக்கிவிடுவாங்க!

இன்று வரைக்கும் மென்பொருள் துறைக்கு என்று சிங்கில் விண்டோவ் சிஸ்டம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரே இடத்தில் அனுமதி வாங்க முடியும்,(இன்னும் சொல்லப்போனால் ஒரே நாளில், வாங்கலாம்) அதுவே வேறு நிறுவனம் என்றால் நாய் படாத பாடு படணும், இது ஒன்றே போதுமே தொழில்வளர்ச்சியை திசை திருப்ப!

said...

//கணக்கில் எடுத்தா காணாமப்போய்டுவிங்க, ஏன் என்றால் மென்பொருள் துறையில இந்திய முழுக்கவே மொத்தமாக 10 லட்சம்பேருக்கு மேல இருக்க மாட்டாங்க, ஆனால் அவர்களை விட பல கோடி மற்ற துறை ஊழியர்கள் இருக்காங்க, சும்மா பினாத்தாம , கார்ப்பரேட் வரி என்னா வருதுனு பாருப்பா!//

நீங்கள் திரும்பவும் ஒப்பிடுவதில் தப்பு செய்கிறீர்கள். IT துறையையும் மற்ற ஒரு துறையையும் ஒப்பிட்டு பார்ப்பது சரி. ஆனால் நீங்கள் IT துறையை மற்ற எல்லா துறைகளின் மொத்ததை வைத்து ஒப்பிடுகிருர்கள். உங்கள் ஒப்பீடு தவறானது.

மேலும் IT துறையை மற்ற பிரைவேட் துறைகளுடன் ஒப்பிடுவதுதான் சரி.

//நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க? //

விவாதம் IT துறை பெற்ற சலுகைகள் மற்றும் அதற்கேற்ற பங்கை பற்றி. அவர்கள் என்ன பிராடக்ட் செய்தார்கள்/ செய்யவில்லை என்பது இங்கு அவசியமற்றது.

//இன்று வரைக்கும் மென்பொருள் துறைக்கு என்று சிங்கில் விண்டோவ் சிஸ்டம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரே இடத்தில் அனுமதி வாங்க முடியும்,(இன்னும் சொல்லப்போனால் ஒரே நாளில், வாங்கலாம்) அதுவே வேறு நிறுவனம் என்றால் நாய் படாத பாடு படணும், இது ஒன்றே போதுமே தொழில்வளர்ச்சியை திசை திருப்ப!//

அதற்க்கு தீர்வு மற்ற துறைகளின் அனுமதியை சுலபமாக்குவது. அதை விட்டிபுட்டு உங்கள் வயிதேரிச்சலை IT துறை மீது கட்டுவது கேனத்தனம்.

எல்லா துறைகளுக்கும் அனுமதியை சுலபமக்கினால் மட்டுமே நாடு விளங்கும்.

நன்றி சிவா.

வவ்வால் said...

அனானி,
//அதற்க்கு தீர்வு மற்ற துறைகளின் அனுமதியை சுலபமாக்குவது. அதை விட்டிபுட்டு உங்கள் வயிதேரிச்சலை IT துறை மீது கட்டுவது கேனத்தனம்.

எல்லா துறைகளுக்கும் அனுமதியை சுலபமக்கினால் மட்டுமே நாடு விளங்கும்.
//

அப்போ it க்கு அதிக வசதி இங்கே தற்சமயம் வழங்கப்பட்டு இருக்கு, எனவே cnr.ராவ் சொன்னதில் தவறில்லை.

மேலும் it துறையினர் சமூக பங்களிப்பு அதிகம் என்றால் என்ன கேட்டேன், வாரக்கடைசியில் குடித்துவிட்டு, போதை மருந்து சாப்பிட்டு அடிக்கும் கூத்தா :-))
சமூகப்பொறுப்பு என்பது என்னனே தெரியாம பேசும் கேனத்தனத்தை என்னவென்பது :-))
----------------------

சரி மற்ற தனியார் துறையினை ஒப்பிட்டாலும் அவர்களின் வரி பங்களுப்பு அதிகம் இருக்கும் என்றாவது புரிகிறதா?

உம்: tcs corporate tax + staff tax , tata motors tax + staff tax என்ற இரண்டை மட்டுமே ஒன்றுக்கு ஒன்று என ஒப்பிட்டால் கூட டாடா மோட்டார்ஸ் கட்டும் மொத்த வரி அதிகமாக இருக்கும்.

மேலும் ongc எல்லாம் கார்ப்பரேட் தான் அது அரசு என்று சொல்லக்கூடாது.

எனவே எந்த அடிப்படையில் it துறை ஊழியர் கட்டும் வரி அதிகம் இருக்கும் சொல்றிங்க?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
வவ்வால் said...
தனியாரோ, அரசோ பொதுவாக அதிகம் இதில் உள்ளே போய்விடக்கூடாது என்றேன்!
அதாவது over dependant ஆகிவிடக்கூடாது என்ற பொருளில்.

மென்பொருள் நிறுவனம் ஆரம்பிப்பது எளிதுனு , அவன் அவன் விண்ணப்பித்து கடைசியில் தேக்க நிலையை உருவாக்கிவிடுவாங்க!
==>
எதில் அதிக வளர்ச்சி/வருமானம் கிடைக்குமோ, அதுவும் குறுகிய காலத்தில், அதிக சிரமங்கள்(தொழிற்சாலை கட்டுவது,பொருட்களை ஏற்றுமதி செய்வது/விற்ப்பது) இன்றி, எல்லோரும் அதில் ஈடுபடுவது இயல்பு.

மென்பொருள் துறை ஆரம்பிக்கறதோ, அல்லது, கலைக்கறதோ வெகு வெகு எளிது. அதில் வேலை செய்ய ஆட்களும் உடனுக்குடன் கிடைக்கிறாங்க. அதனோட,அத(சேவை) வாங்கி உபயோகிப்பவர்களும் உடனே தயாரா இருக்காங்க.

இதே, உற்ப்பத்தி துறைன்னு எடுத்துக்கங்க. ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கறதுகு சில/பல வருடங்கள் ஆகும்.அப்புரம் அந்தத் தொழிற்சாலை ஆரம்பிக்க நிறைய முதலீடு வேணும், அதுக்கான மூலப்பொருட்கள், அது,இதுன்னு நிறைய இருக்கு. அப்புரம் அத்தொழிற்சாலையில தயாரகிற பொருட்களுக்கு மார்கெட் பிடிக்கணும். இந்த மாதிரி எந்த பிரச்னையுமே மென்பொருள் துறையில இல்ல பாருங்க.

இப்பவே ஐ டி துறை கீழ்நோக்கி போயிட்டு இருக்கற மாதிரி தெரியுது. ஏன்னா,வெளிநாட்டு கிளையண்ட் நாம் தர்ர சேவைக்கு விலையக் குறைச்சுர்ரான். ஆனா, நமக்கு இந்தியாவுல சம்பளம் வருடா வருடம் கூட்ட வேண்டியிருக்கு. அதனால, நம்ம இந்தியக் கம்பெனியும், செலவைக் குறைக்க நிறைய நடவடிக்கை எடுக்கிரான்.

இன்னும் 2 வருடத்துல ஐ டி த்துறையவிட வேர ஏதாவது துறை இதே மாதிரி புகழ் பெற்றதுனா, அப்ப, இந்தப் பொம்மையை(ஐ டி) விட்டுட்டு, அந்தப் புது பொம்மைய கவனிக்கப் போய்டுவாங்க. அம்புட்டுதேன். அதனால இந்த over/under dependant எல்லாம் இருக்காது.

<==
அதனால் தான் அரசு கொடுத்த சலுகை போதும்னு இருக்கு, ஆனால் அரசு இன்னும் எங்களை கண்டுக்கலைனு அப்போ அப்போ பெரும் புள்ளிகள் புலம்புறாங்களே, அதனால் தானே ராவ் போன்றவர்கள் கொடுத்தது போதும் இனி புண்ணியம் இல்லை என்கிறார்கள், ==>
அரசாங்கத்துக்கு வருவாய் இருக்கு[என்கிட்ட எவ்வளவு வருவாய் என்கிற தகவல்கள் இல்லை].
நம்ம மாநிலத்துல தெருவிளக்குக்கு மின்சார செலவு செய்யக்கூட நாதியில்லா நிறைய நகராட்சிகள் இருக்குன்னு செய்திகளில் படிக்கரோம்.

ஆனால், சென்னையில ஒரே ஒரு நகராட்சி(சோழிங்கநல்லூர்) மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் வரி வசூல் செஞ்சிருக்காங்க. ஏன்னா,அங்க டைடல் பார்க் இருக்கு. இதுவும் செய்திகளில் படித்ததுதான்.

அதனால,ஆதாயம் இல்லாம, அரசாங்கம் ஒண்ணும், மென்பொருள் துறைக்கு அள்ளிவிடல.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நாம பிரச்னையவிட்டு எங்கியோ போறோம்.

ஐ டி துறை அதிக முக்கியம் தரப்பட்டுள்ளதா?
ஆம்.
ஏன்?
நம் நாட்டிலுள்ள அபரித மனித சக்தியை உபயோகப்படுத்தி அதிக பொருள்(பணம்) ஈட்டத்தான்,அதுவும் விரைவாக.

ஏன்? எல்லோருக்கும் பணமே பிரதானமாக இருப்பதால், பணம் சம்பாதிப்பதற்க்கு ஐ டித் துறையை நாடுகிறார்கள்.
மற்ற துறைகளில்(இயந்திரவியல், வங்கித்துறை,...) பல வருடங்கள் வேலை பார்த்தவர்கள்கூட தன் பார்த்த வேலையை விட்டுவிட்டு ஐ டித் துறையில் சேருகிறார்கள்.

மேலும், இதில் ஈடுபடுவது எளிது. அரசியல்வாதியாகக் கூட சில தகுதி(???)கள் தேவை. ஆனல், ஐ டி துறையில் ஈடுபட குறைந்த பட்சம் ஒரு கல்லூரிப் பட்டம்(ஒரு பட்டயமும்) போதுமானது.

பெங்களூரை ஐ டி த்துறையினர் சீரழித்தார்களா?
ஐ டித்துறை தவிர வேரெந்தத் துறையாக இருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும்.

அவ்வாறு நடை பெறாமல் இருப்பதற்க்கு என்ன செய்திருக்க வெண்டும்? என்ன செய்ய வேண்டும்?

ஊருக்குள் ஐ டி கம்பெனிகளை செயல்பட விடாமல், சிப்காட் மாதிரி ஒரு தொழிற்பேடை மற்றும் வீட்டுவசதியை 1990களிலேயே அரசாங்கம் செய்திருக்க வேண்டும்.

<==
மேலும் it துறையினர் சமூக பங்களிப்பு அதிகம் என்றால் என்ன கேட்டேன், வாரக்கடைசியில் குடித்துவிட்டு, போதை மருந்து சாப்பிட்டு அடிக்கும் கூத்தா :-))
==>
வேலை நிலையும்(இரவு வேலை, சீக்கிரம் வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம்) அதற்க்கான வசதியும் கிடைத்தால் எந்தத் துறையுமே இப்படிதான் இருக்கும்.

பிறகு எப்படித்தான் பி.ஹச்டி மாணவர்கள் உருவாவார்கள்?
அது தேவையைப் பொருத்து. நாளைக்கு ஒரு துறையில் பி.ஹச்டி படித்தவர்கள்தான் வெண்டுமெனில், எல்லோரும் பி.ஹச்டி படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

said...

//தெளிவா சொன்ன புரிஞ்சுப்போம்ல :-)) கொஞ்சம் அந்த சமுதாய பங்கை சொல்லிட்டுப்போறது!
//

http://www.azimpremjifoundation.org/html/program.htm

http://www.wiproapplyingthoughtinschools.com/

http://www.wiprocorporate.com/wiprocares/wiprocares-index.asp.htm


http://www.infosys.com/infosys_foundation/health.htm

http://www.infosys.com/infosys_foundation/rural.htm

http://www.infosys.com/infosys_foundation/learning.htm

http://www.tata.com/0_our_commitment/employee_relations/articles/20030304_maitree_community_initiative.htm

http://www.deccanherald.com/Content/Feb62008/national2008020650748.asp

வவ்வால் said...

சிவா,
//அதுக்கான மூலப்பொருட்கள், அது,இதுன்னு நிறைய இருக்கு. அப்புரம் அத்தொழிற்சாலையில தயாரகிற பொருட்களுக்கு மார்கெட் பிடிக்கணும். இந்த மாதிரி எந்த பிரச்னையுமே மென்பொருள் துறையில இல்ல பாருங்க.
//

இது எப்படி சொல்றிங்க, மென்பொருள் துறைக்கும் மூல தனம், மார்க்கெட்டிங்க் எல்லாம் உண்டு.

//இந்தப் பொம்மையை(ஐ டி) விட்டுட்டு, அந்தப் புது பொம்மைய கவனிக்கப் போய்டுவாங்க. அம்புட்டுதேன். அதனால இந்த over/under dependant எல்லாம் இருக்காது.//

நீங்க சொன்னது ரொம்ப சரி, ஆனால் இப்போ மென்பொருள் துறைல வேலைப்பார்த்தவங்க , எல்லாம் என்ன ஆவாங்க, இவர்களால் வேறு வேலைக்கே போக முடியாது?

இப்போ கூட பார்த்தாலே தெரியும் லே ஆப் வாங்கியவர்களால் வேறு வேலையை தேடுவது கடினமாக இருப்பது.

இப்போ எல்லா கல்லூரி மாணவர்களும் it கே தயார்ப்படுத்திக்கொள்கிறார்கள்,திடீர் என சரிவு வரும் போது அது பெரும் பிரச்சினையை கொண்டு வரும்.

//அரசாங்கத்துக்கு வருவாய் இருக்கு[என்கிட்ட எவ்வளவு வருவாய் என்கிற தகவல்கள் இல்லை]. //

அரசாங்கத்துக்கு வருவாய் இருக்கு, ஆனால் it விட உற்பத்தி துறையால் வரும் வருவாய் அதிகம், ஆனால் இவர்கள் உற்பத்தி துறையை விட அதிக சலுகை கேட்டு புலம்புகிறார்கள் என்பது தான் இங்கே பிரச்சினை, இப்போவாது சரியா என்ன பேசுறாங்கனு புரிந்துக்கொள்ளுங்கள்!

//ஆனால், சென்னையில ஒரே ஒரு நகராட்சி(சோழிங்கநல்லூர்) மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் வரி வசூல் செஞ்சிருக்காங்க. ஏன்னா,அங்க டைடல் பார்க் இருக்கு. இதுவும் செய்திகளில் படித்ததுதான்.//

டைடல் பார்க் இருப்பது தரமணி, ஆனால் சோழிங்கநல்லூரில் நிறைய மென்பொருள் நிறுவனங்கள் இருக்கு, மேலும் அது ஊராட்சி அமைப்பு தான் நகராட்சி அல்ல.இருப்பினும் அங்கே வரி அதிகம் வரலாம்.

ஏன் ஸ்ரீபெரும்புதூரில் ஹுண்டாய், நோக்கியா, செயிண்ட் கோபைன் என்று பல தொழிற்சாலைகள் இருப்பதால் வரி வராது என்றா சொல்கிறீர்கள்.

இதை விட அதிக வரி வரும் எப்படினா மூலப்பொருள் ஒரு மாநிலத்திலிருந்து இங்கே வரும் போது ஒரு நுழைவு வரி, பின்னர் இங்கே செய்யப்பட்ட பொருள்கள் போகும் போது அதுக்கு ஒரு வரி என்று பலதும் வரும், ஆனால் மென்பொருள் துறையில் இருந்து இப்படிலாம் பல கட்ட வரி வராது. என்ன பொருள் இங்கும் அங்கும் இடம் மாறும் அங்கே?

it ஆல் வருமானம் இல்லைனு சொல்லவில்லை, அவர்களின் மதிப்பை விட அதிக சலுகைகள் தரப்பட்டுள்ளது, மேலும் தரவில்லையே என்று புலம்புவதை தான் கேள்விக்குட்படுத்தியுள்ளார் ராவ்!

said...

//உம்: tcs corporate tax + staff tax , tata motors tax + staff tax என்ற இரண்டை மட்டுமே ஒன்றுக்கு ஒன்று என ஒப்பிட்டால் கூட டாடா மோட்டார்ஸ் கட்டும் மொத்த வரி அதிகமாக இருக்கும்.//


TCS Corporate tax : 904 crores (உங்கள் விவரம்)
Tata Motors corporate tax : 921 crores

TCS Employee Count : 1,08,000
Tata Motors Employee count : 22000 முதல் 32,000 வரை.

IT நிறுவனத்தில் வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்.
IT நிறுவனத்தின் வரி பங்கு, staff income tax சேர்த்தால் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

//மேலும் ongc எல்லாம் கார்ப்பரேட் தான் அது அரசு என்று சொல்லக்கூடாது.//

ongc போன்ற நிறுவனகள் பெரும்பாலான பங்குகளுக்கு அரசே உரிமையாளர். உதாரணத்துக்கு ongc யில் 75% பங்குகள் இந்திய குடியரசு தலைவிக்கு சொந்தம். பிறகு எப்படி அது தனியார் நிறுவனமாக முடியும்.

---

சார் நான் சொல்ல வருவது என்னவென்றால். ஒரு IT நிறுவனம் அது பெற்ற சலுகைகளை விட அதன் வரி பங்கு (corporate tax + staff income tax) அதிகமாக இருப்பின், அந்த நிறுவனங்களை குறை சொல்வது சரியல்ல.

நன்றி சிவா.

K.R.அதியமான் said...

Vavval,

can you reply to my 8 points in my last comment ?

MArket forces react to supply and demand. and prices and costs send correct information reg quantity and quality of demand and other parametere. it is simple.

no one need to bother or care if or why so much importanc to IT, etc. in future IT may pay less or migrate to even low cost centres. it is natural flow and adjustment.

this post is about the conjestion within Bnagaolore due to traffic and IT location points, life styles of IT employees, etc.
Say, can we compare the life styles of fashion parade people, bolloywood, media, advertisement people, pimps, drug pushers, politcal brokers. there are thousands of diverse professions with varying income levels, ethics, values and lifestyles. why single out IT alone in this matter ?

Devadasi system and maintaining concubines openly, polygamy were quite common in India since sanga kaalam. So what is new ? why are IT people's life styles alone critisied. our CM is openly living with two wives and etc. many writers and media peope have , hum, affairs, etc. no one is bothered. same should be the attitude towards IT employees and cos. Pls leave them alone.

வவ்வால் said...

//Tata Steel emerged as the leader with a share of 5.75 per cent amounting to Rs 8,426.76//

டாடா இரும்பில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் சொல்லுங்க?

, டாடா மோட்டார்ஸ் என்று இரும்புக்கு பதிலாக போட்டுவிட்டேன், டாடா இரும்பினை பற்றித்தான் ஆரம்பத்தில் பின்னூட்டம் போட்டு இருப்பேன் பாருங்க!(முதலிலேயே சொல்லிவிட்டதால் வந்த குழப்பம்)

டாடா இரும்புக்கு அடுத்தது டாடா டீ வருகிறது ,Tata Tea is the second largest taxpayer accounting for two per cent share at Rs 3,037.54 crore,

//சார் நான் சொல்ல வருவது என்னவென்றால். ஒரு IT நிறுவனம் அது பெற்ற சலுகைகளை விட அதன் வரி பங்கு//

அவங்க பெற்ற சலுகை வரிகளை விட அதிகம்னு ராவ் உட்பட எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கோம், நீங்க என்னனா திருப்பி உல்டாவா சொல்றிங்க,

நீங்க எப்படி 8000 கோடி வரிக்கட்டும் ஒரு நிறுவனத்தை விட 900 கோடி வரிக்கட்டும் நிறுவனம் அதிகம் நாட்டுக்கு பங்களிப்பு செய்ததாக சொல்றிங்க?

//ongc போன்ற நிறுவனகள் பெரும்பாலான பங்குகளுக்கு அரசே உரிமையாளர். உதாரணத்துக்கு ongc யில் 75% பங்குகள் இந்திய குடியரசு தலைவிக்கு சொந்தம். பிறகு எப்படி அது தனியார் நிறுவனமாக முடியும்.//

75% பங்குலாம் அரசிடம் இல்லை, கிட்டத்தட்ட 42 % சதவீதம் இருக்கும்னு நினைக்கிறேன்.மேலும் இதெல்லாம் கம்பெனி லா'ஸ் கீழ வரும் அரசு நடத்தும் நிறுவனங்கள், ஒரு தனியார் நிறுவனம் எப்படியோ அப்படித்தான் இதன் வரி விகிதங்களும், வரியில் சலுகைலாம் இல்லை, எனவே அது கட்டும் வரி வைத்து பார்க்கவும்.அப்போ மாருதி கார் தனியார் என்று சொல்விங்களா? 49% சுசுகி, 51 % இந்தியாவிடம் இருக்கு அதில் பங்குகள்.

வவ்வால் said...

அதியமான்,

//can you reply to my 8 points in my last comment ?
//

தேவைப்பட்டால் மட்டும் ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடுவேன், நீங்கள் எப்போதும் அப்படியே போடுபவர், எனவே பெரும்பாலும் பெரிதாக ஆங்கிலத்தில் போடும் பின்னூட்டங்களை நான் படிப்பதில்லை என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், மேலும் நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் புனைவு ரகத்தில் வருவது :-)) எதுவுமே சரியான புள்ளிவிவரத்துடன் இல்லை.

உதாரணமாக சொல்கிறேன், அஷோக் லெய்லாண்ட் திருவொற்றியூரில் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளி நடத்துகிறது, இன்னும் பல செய்கிறது, tvs குருப் மதுரையில் பல பள்ளிக்கூடங்களை நடத்துகிறது , உதவிகள் செய்கிறது, ஏன் tata institute of fundamendal science, மும்பை, மருத்துவக்கல்லூரி எல்லாம் நடத்துகிறது, வெளிநாடு சென்று படிக்க உதவி தொகை அளிக்கிறது. இப்படி பலரும் செய்கிறார்கள்,ரிலையன்ஸ் முதல் அனைத்து தொழிற்துறையினரும் சமூக சேவை செய்கிறார்கள், அதுவும் பெரிய அளவில். எனவே சாரிட்டபிள் பணி செய்வது it என்று மட்டும் சொல்லிக்கொண்டு வராதீர்கள், உங்களுக்கு தெரியாமல் பலவும் நடக்கிறது.இன்னும் பல பல உதாரணங்கள் தர முடியும்.

உங்களுக்கு ஒன்று தெரியாது என்பதால் இல்லை என்று சொல்வதை நான் கருத்தில் கொள்ளமுடியாதே!

K.R.அதியமான் said...

////அவங்க பெற்ற சலுகை வரிகளை விட அதிகம்னு ராவ் உட்பட எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கோம்///

Nonsense. Can anyone prove this ?
and are the state and central govts crazy to dole out more than they could receive back ?

What tax breaks ? only in STPI prks and MEPZ (and MEPZ covered all other kinds of EOUs). most of the IT majors are located outside STPI with same servie and income tax as any other service industry.

Land sale to IT cos at subsidised costs : yes, intially. but many many other industries too have been granted the same 'subsidy' ;
like car cos, chemical hubs, mega power and petro projects, fertiliser cos, steel cos, etc.
so what is new here ?

now many cos aquire land directly from peope thru open marker bids.

i think plain jealosy and heart burn is the reason for many comments in this post. We Indians still have the socialist mentality.
If everyone is starving then it is ok, but if a few manage to climb then it is not accepted..
Indian crab story !!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
வவ்வால் said

இது எப்படி சொல்றிங்க, மென்பொருள் துறைக்கும் மூல தனம், மார்க்கெட்டிங்க் எல்லாம் உண்டு. ==>
ஐ டித்துறையில் அது எளிது அப்படிங்கற அர்த்தத்துலதாலதான் அப்படிச் சொன்னேன்.அதாவது,ஒரு தொழிற்சாலைல உற்ப்பத்தியைக் குறைக்கறதோ/அதிகரிக்கறதோ, மூலப்பொருட்களை வரவழைக்கறதோ சிரமம்[என் பழைய கம்பெனியில் தெ.அமெரிக்கா சிலியிலிருந்து மூலப்பொருள் வரும்]

<==
வவ்வால் said
நீங்க சொன்னது ரொம்ப சரி, ஆனால் இப்போ மென்பொருள் துறைல வேலைப் பார்த்தவங்க , எல்லாம் என்ன ஆவாங்க, இவர்களால் வேறு வேலைக்கே போக முடியாது?

இப்போ கூட பார்த்தாலே தெரியும் லே ஆப் வாங்கியவர்களால் வேறு வேலையை தேடுவது கடினமாக இருப்பது.

இப்போ எல்லா கல்லூரி மாணவர்களும் IT கே தயார்ப்படுத்திக்கொள்கிறார்கள்,திடீர் என சரிவு வரும் போது அது பெரும் பிரச்சினையை கொண்டு வரும்.
==>
ஆமாம். இதுவும் எல்லாருக்கும் தெரியும். தெரிந்துதான் ரிஸ்க் எடுக்கிரார்கள்.
என் உறவினர் இயந்திரவியல் படித்து சொந்தாமவெல்லாம் லேத் வைத்துப்பார்த்தார்.10 வருடங்கள் இயந்திரவியலில் இருந்துவிட்டு மென்பொருள் பக்கம் வந்தார்.
இதற்க்கு யாரைக் குறை சொல்ல முடியும்? அல்லது சட்டம் போட்டு தடுக்கத்தான் முடியுமா? நாம் சொன்னால் "இவன் மட்டும் மென்பொருளில் நிறைய சம்பாதிக்கிறான். அவன் நாம் முன்னேறிவிடக்கூடாது என்று நினைக்கிறான்" என்று கெட்ட பேர்.

சந்தைப் பொருளாதாரத்துக்கு வந்து விட்டோம். சந்தைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
<==
ஆனால் இவர்கள் உற்பத்தி துறையை விட அதிக சலுகை கேட்டு புலம்புகிறார்கள் என்பது தான் இங்கே பிரச்சினை, இப்போவாது சரியா என்ன பேசுறாங்கனு புரிந்துக்கொள்ளுங்கள்!
==>
ஹா ஹா ஹா.
சரியான புள்ளி விவரங்கள் இல்லாமல் குண்டக்க மண்டக்க என்று பேசலாமே ஒழிய அது வாதத்துக்கு உதவாது.

அப்படி உற்ப்பத்தித்துறைக்கு இல்லாத என்ன சலுகையை கேட்டுவிட்டார்கள் ஐ டித்துறையினர்? அப்படியே கேட்டாலும் ஐ டித்துறையில் திடீரென ஏற்ப்பட்ட சரிவு, உற்ப்பத்தித்துறைக்கு இல்லை.ஐ டித்துறையில் எல்லாமே ஏற்றுமதிதான். ஆனால்,உற்ப்பத்தி துறையில் பெரும்பாலும் உள்ளூர் உபயோகம்தான். எப்படி ரெண்டு இழப்பும் ஒன்றாகும்? உண்மையில் உற்பபத்தித்துறையில் இறக்குமதிக்கு டாலரின் சரிவால் நல்ல அனுகூலம்.

சி என் ஆர் ராவ் பெங்களூருவில் ஐ டி த்துறை அதிகம் இருப்பதால் ஐ டி துறையிப்பற்றி பேசியுள்ளார். அவரே, சண்டீகரிலோ,புனேயிலோ இருந்திருந்தால் அந்தந்த ஊரிலுள்ள துறையைப் பற்றி பேசியிருப்பார்.

பெட்டிக்கடை வைப்பவரிலிருந்து டாட்டா/அம்பானி வரை கேட்கத்தான் செய்வார்கள். அரசாங்கம் நாட்டுக்கு எது நல்லதோ/அவசியமோ, அதற்க்குத் தகுந்தார்போல் சலுகை கொடுக்கிறர்கள்.

ஏன் தனி நபரான நாம்கூட வருமான வரியில் சலுகையை எதிர்பார்க்கிரோம்.

எனக்குத்தெரிந்து எஸ் டி பி ஐ-ல் பொருட்களுக்கு சில வரிச்சலுகை உள்ளது. இது ஏற்றுமதி சார்ந்த நிறைய மற்ற பொருட்களுக்கும் இருக்கிறது என்ற நினைக்கிரேன்.

மென்பொருள் கம்பெனிகள் சந்தை விலையில்தான் நகருக்குள்/நகருக்கருகில் நிலத்தை வாங்குகின்றன. தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுப்பதாகத் தெரியவில்லை.

கம்பெனிகள் கட்டும் கார்ப்பரேட் வரியில் இருக்கலாம். அதுகூட 2009 வரைதான்.

தனிநபர் வருமான வரிக்கு வருவோம். ஒருவர் உற்ப்பத்தி துறையில் சேரும்போது சம்பளமாக ரூ.5000 வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அவர், ரு.20000 வங்குவதற்க்கு 10 வருடங்களூக்குமேல் ஆகும். வருட மொத்த வருமானம் ரூ.2 லட்சம். அதிலும் ரூ.1 லட்சத்துக்கு வரி சலுகை வாங்கலாம். இதே மென்பொருள் துறையை எடுத்துகொள்வோம். அவர் சேரும்போதே 10000,12000. அப்புரம் 2 3 வருடங்களில் சம்பளம் மிக மிக அதிகமாய் விடும்.இப்போ சொல்லுங்கள் யார் அதிகம் வரி கட்ட முடியும் என்று?. [பொறியியல் கம்பெனியில் என்னுடைய ஆரம்ப சம்பளம் ரூ.1000(Rs.Thousand only),இப்போது நான் அதே கம்பெனியில் வேலை பார்த்தால் என் சம்பளம் ரூ.15000/20000 மேல் வராது.அந்த கம்பெனியில் 2000 பேர் வேலை செய்தார்கள்.அவ்வளவு பெரிய கம்பெனி. இந்த விவரங்களை சரிபார்க்க வேண்டுமெனில் உங்களுடைய போன் எண்ணைக் கொடுங்கள். நான் நிரூபிக்கத் தயாராய் இருக்கிரேன். இப்பொது மென்பொருள் கம்பெனியில் நான் வாங்கும் சம்பளத்தையும் இந்த சம்பளத்தையும் ஒப்பிட்டு பார்ககவே இயலாது ]

அதனால், சி என் ஆர் ராவ் சொல்லியதை வைத்துப்பார்த்தல் ஐ டி த்துறை பிரச்னை இல்லை. பெங்களூருவில் ஐ டித்துறை அதிகம் இருப்பதால் ஐ டித்துறையை சொல்லியிருக்கிரார்.அவ்வளவுதான்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
K.R.அதியமான். 13230870032840655763 said

i think plain jealosy and heart burn is the reason for many comments in this post. We Indians still have the socialist mentality.
If everyone is starving then it is ok, but if a few manage to climb then it is not accepted..
Indian crab story !! ==>

டபுள் ரிப்ப்பிபிட்ட்டேய்.
அதே அதே. ரொம்ப சரியாச் சொன்னீங்க

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

கடைசியா ஒண்ணு.

ஐ டித்துறைன்னு ஒண்ணு இந்தியாவுக்கு வராம இருந்திருந்தா எல்லாம் நல்லா இருக்கும்னு அபிப்ராயப்படுறீங்களா?

ஆமெனில், (கம்யூனிஸ்ட்கள் என்று தன்னை சொல்லிக்கொள்ளும்)கேரளா/மே.வங்க அரசுகள்கூட ஐ டித்துறைக்கு இவ்வளவு முக்கியத்தும் கொடுப்பதேன்?

வவ்வால் said...

சிவா,
//இதே மென்பொருள் துறையை எடுத்துகொள்வோம். அவர் சேரும்போதே 10000,12000. அப்புரம் 2 3 வருடங்களில் சம்பளம் மிக மிக அதிகமாய் விடும்.இப்போ சொல்லுங்கள் யார் அதிகம் வரி கட்ட முடியும் என்று?. [பொறியியல் கம்பெனியில் என்னுடைய ஆரம்ப சம்பளம் ரூ.1000(Rs.Thousand only),இப்போது நான் அதே கம்பெனியில் வேலை பார்த்தால் என் சம்பளம் ரூ.15000/20000 மேல் வராது.அந்த கம்பெனியில் 2000 பேர் வேலை செய்தார்கள்.அவ்வளவு பெரிய கம்பெனி. இந்த விவரங்களை சரிபார்க்க வேண்டுமெனில் உங்களுடைய போன் எண்ணைக் கொடுங்கள். நான் நிரூபிக்கத் தயாராய் இருக்கிரேன். இப்பொது மென்பொருள் கம்பெனியில் நான் வாங்கும் சம்பளத்தையும் இந்த சம்பளத்தையும் ஒப்பிட்டு பார்ககவே இயலாது ]//

நீங்க இன்னும் அந்த காலத்திலேயே இருக்கிங்க , பொறியியல் முடிச்சுட்டு இப்போ உற்பத்தி துறைல வேலைல சேர்பவர்கள் எல்லாம் துவக்க சம்பளமாக 20K-30K வாங்க ஆரம்பித்தாயிற்று.

யுனிவர்சல் கார்போரண்ட்மில் 30000 சம்பளம் வாங்குகிறார் சேர்ந்த ஒரே வருடத்தில், ஏர் டெல், ரிலையன்ஸ், நோக்கியாவில் வேலை செய்யும் பொறியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று விசாரித்துப்பார்க்கவும்.

மென்பொருள் துறையில் அதிக சம்பளம் ஆனால் அதுக்குனு 1000 ரூபாய் என்றெல்லாம் உற்பத்தி துறையில் என்பது ரொம்ப எப்படி :-))

பெங்களூர் என்பது ஒரு சின்ன உதாரணம் தான் எனவே அங்கே மட்டும் தான் பிரச்சினை என்பதல்ல, மேலும் தமிழ் நாட்டில் பார்த்தால் கூட சென்னை தாண்டி மென்பொருள் மூலம் வேலை வாய்ப்பு உட்பகுதியில் இல்லை, அப்போ அங்கே இருப்பவர்களை வாழ வைப்பது எந்த துறை?

மெட்ரோக்களில் மட்டும் ஜீவிக்கும் ஒரு சின்ன கும்பலுக்கே பல சலுகை வேண்டும் எனில் , மற்ற துறைக்கு தேவை இல்லையா?
---------------------------------
அதியமான் போன்ற "nonsense" களுக்கெல்லாம் பதில் அளிப்பதாயில்லை இனி,அவர் பொத்திக்கொண்டு ஓடட்டும்:-))

வவ்வால் said...

//மென்பொருள் கம்பெனிகள் சந்தை விலையில்தான் நகருக்குள்/நகருக்கருகில் நிலத்தை வாங்குகின்றன. தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுப்பதாகத் தெரியவில்லை.//

சந்தை விலை என்று இல்லை , அவர்களுக்கு குறைவான தொகையில் அளிக்கப்படுகிறது. அவர்கள் அல்லாமல் மற்றவர்கள் அதே பகுதியில் வாங்கும் போது விலை அதிகம், இதனை பழைய மகாபலிபுரம் சாலையில் இடம் வைத்திருப்பவர்களை கேட்டால் தெரியும்.

மேலும் தடை இல்லா மின்சாரம், குடிநீர் சலுகை விலையில் அரசு அளிக்கிறது.

ஹைராபாதில் மைக்ரோசாப்டிற்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள்,

// The entire land would be transferred to the company by the government at a price of Rs 50 lakh (Rs 5 million) with all the concessional provisions, the Mohammed Ali Shabbir information and public relations minister told the media.

The concessions offered to the Microsoft centre include Rs 20,000 rebate on each job created, reimbursement of 50 per cent of stamp duty on the first transaction and all the infrastructural facilities at the doorsteps that includes the laying of the road connecting the development centre with the Old Bombay highway.

The road alone will cost the government about Rs 15 crore (Rs 150 million) that includes the cost of land acquisition, around Rs 2 crore (Rs 20 million) on power lines, about Rs 50 lakh (Rs 5 million) on drainage facilities among others.//

ஹைதராபாத்தில் it city இருக்கும் இடத்தில் ஒரு ஏக்கர் இடம் சில கோடிகள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.இது ஒரு சின்ன உதாரணம் தான்!

இதைப்போல வேறு எதாவது துறைக்கு அரசு உதவுமா?

K.R.அதியமான் said...

///தேவைப்பட்டால் மட்டும் ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடுவேன், நீங்கள் எப்போதும் அப்படியே போடுபவர், எனவே பெரும்பாலும் பெரிதாக ஆங்கிலத்தில் போடும் பின்னூட்டங்களை நான் படிப்பதில்லை என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், மேலும் நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் புனைவு ரகத்தில் வருவது :-)) எதுவுமே சரியான புள்ளிவிவரத்துடன் இல்லை.///

But you can read in English and answer in Tamil. :)

I was speaking about the ripple effect of some much savings and spendings by IT employees.

And pray what statistics did you provide ? there some 12 lac IT people who on the average earn some 3 lacs p.a and pay some 1 lac p.a as income tax. that is roughly
12 lac X 1 lac rupees p.a tax :
1,20,00,00,00,000 rupees.
12,000 crores approx. ok..
is any other group of 12 lac empoyees paying so much tax ?

and most importantly who will provide alternate employment to this million, if there was no IT.
Can you ?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

என்றென்றும் பாலா. பின்னியாச்சு. அரை சதம். அப்படியே, பின்னூட்டத்தில 50 என்ற எண் ஃப்ளாஷ் ஆகிற மாதிரி எதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
மென்பொருள் துறையில் அதிக சம்பளம் ஆனால் அதுக்குனு 1000 ரூபாய் என்றெல்லாம் உற்பத்தி துறையில் என்பது ரொம்ப எப்படி :-)))) ==>

நீங்க இப்படி எல்லாம் கேட்பீங்கன்னுதான் ஒங்க போன் எண்ணைக்கேட்டேன் =))
அப்போது வாழை இலையில் மதியச்சாப்பாடு ரூ.5 or 6. குறஞ்சபட்ச பஸ் கட்டணம் 0.50 பின் 0.75 என்று ஞாபகம் =)))) [நீங்க சின்னைப்பையன்னு நினைக்கிரேன் =))) ]

அதுதான், இப்படிச் சொன்னேன். இப்ப அதே கம்பெனியில சேர்ந்தா ஆரம்பச் சம்பளமா ரு.5000 கொடுப்பாங்கன்னு .

<==
ஹைதராபாத்தில் it city இருக்கும் இடத்தில் ஒரு ஏக்கர் இடம் சில கோடிகள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.இது ஒரு சின்ன உதாரணம் தான்!

இதைப்போல வேறு எதாவது துறைக்கு அரசு உதவுமா?
==>
அரசு உதவாது என்று நாம் ஏன் கற்ப்பனை செய்ய வேண்டும்? யாரவது அப்படி உதவி கேட்டு, அப்படி உதவாததற்க்கு ஏதாவது உதாரணம் காட்ட முடியுமா?

பெங்களூரு எப்படி ஐடித்துறைக்கோ, அதுபோல,ஹைதராபாத் உயிரித்துறைக்கும்,சென்னை உற்பத்தித்துறைக்கும் முக்கியத்துவம் பெரூகிறது என்று செய்திகளில் படித்திருக்கிரேன்.

ஹைதராபாத்தில் வெறும் ஐ டித்துறை மட்டும்தான் இருக்கிறதா? இல்லை, மற்ற துறைகளுக்குச் சலுகை ஒன்றும் கொடுக்கப்படவில்லை அல்லது ஐ டித்துறையைவிட குறைந்த சலுகை என்பதற்க்கு நம்பத்தகுந்த ஆதாரம் ஏதானும் இல்லாமல் பேசுவது வெற்றுப் பேச்சாகத்தான் முடியும்

ஹைதராபாதில் ஃபேப் இண்டியா என்ற செமிகண்டக்டர் கம்பெனிக்கு சலுகை கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிங்கப்பூர், அயர்லாந்திலெல்லாம் செமிகண்டெக்டருக்கு சலுகை கொடுக்கும்போது இந்தியாவும் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்[அவன் கொடுத்தா அங்க போக வேண்டியாதுதானே].

அதுதான் சொல்கிரேன். முழு விபரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக பேசுவதில் அர்த்தம் இல்லை

இதற்க்கு மேல் இந்த வி(தண்டா)வா வாதத்தை வளர்த்திக் கொண்டு போவதில் அர்த்தம் இல்லை.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
வவ்வால் said...
மெட்ரோக்களில் மட்டும் ஜீவிக்கும் ஒரு சின்ன கும்பலுக்கே பல சலுகை வேண்டும் எனில் , மற்ற துறைக்கு தேவை இல்லையா? ==>
வவ்வால்,
<==
வவ்வால் நீங்க பேசுவது வேடிக்கையாய் இருக்கிறது. இல்லாத துறைக்கு / கம்பெனிக்கு எப்படி சலுகை கிடைக்கும்?. கம்பெனியை ஆரம்பிக்காமல் சலுகைய எதிர்ப்பார்ப்பது எப்படி என்று எனக்கு புரியவில்லை.

எல்லாரையும் போல் செய்திகளில் மென்பொருள் துறையினரைப் பற்றி நிறைய [தப்பு தப்ப =)) ] படிச்சிட்டு பேசரீங்கன்னு நினைக்கிரேன்.

ஒரு மாதம் ஏதாவது வணிக இதழ்(எக்கனாமிக் டைம்ஸ்) படிச்சுப் பாருங்க. மற்ற துறைகளைப் பார்க்கும்போது, மென்பொருள் துறையெல்லாம் ஜுஜுபி. ஒரே ஒரு வித்தியாசம் மென்பொருள்துறையில ஆட்கள் அதிகமாக இருக்கராங்க. அதுவும் சம்பளம் அதிகமாய் வாங்கித்தொலைக்கிராங்க.

தினமும் ரூ.1000/5000 கோடி அளவில் புதுசு புதுசா கம்பெனிகள் ஆரம்பிக்கிற செய்தி வருது.

பின். குறிப்பு:உங்களுக்காக

நான் அடிப்படையில் மெட்ரோ பகுதியச் சேர்ந்தவனில்லை. கடைசிக் காலத்தில் மெட்ரோவில் இருக்கப் போவதுமில்லை. அதனால்,மெட்ரோ வாசியினருக்காக வெட்டியாய் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமில்லை.

said...

//75% பங்குலாம் அரசிடம் இல்லை, கிட்டத்தட்ட 42 % சதவீதம் இருக்கும்னு நினைக்கிறேன்.//

உங்கள் விவரங்கள் தவறு. ongc நிறுவனம் நிதி அறிக்கையில் பங்கு உரிமையாளர்களின் விவரங்கள் இங்கு உள்ளது.
ongc'ல் 75% மேல் பங்குகள் அரசுக்கு சொந்தம்.
http://www.ongcindia.com/financial_31Dec_07.asp

ongc காகிநாடா பிராஜக்ட்க்கு 16,000 கோடி சலுகைகள் கேட்டுள்ளது. அதை பற்றி கேள்வி கேக்க மறுப்பது ஏன்? IT துறையை மட்டும் 'தர்ம அடி' அடிப்பது சரியல்ல.

//அப்போ மாருதி கார் தனியார் என்று சொல்விங்களா? 49% சுசுகி, 51 % இந்தியாவிடம் இருக்கு அதில் பங்குகள்.//

மீண்டும் தவறு. மாருதி சுசுகியின் கடைசி நிதி அறிக்கையின் படி. அரசின் பங்கு உரிமை 0% என உள்ளது.
http://www.marutisuzuki.com/cars-images/image/shareholding-pattern/shareholding_Dec31st_2007.pdf

//Nonsense. Can anyone prove this ?
and are the state and central govts crazy to dole out more than they could receive back ?//
//அதியமான் போன்ற "nonsense" களுக்கெல்லாம் பதில் அளிப்பதாயில்லை//

அதியமான் சரியாதான் கேள்வி கேட்டிருக்கார். யாருக்காவது தில் இருந்தால் பதில் சொல்லட்டும்.

//i think plain jealosy and heart burn is the reason for many comments in this post. We Indians still have the socialist mentality.
If everyone is starving then it is ok, but if a few manage to climb then it is not accepted..
Indian crab story !!//

நம் எப்போது நண்டு பிடி சொசியலிசதிலிருந்து விடிபடுவோம் என்று தெரியவில்லை. :-(

நன்றி சிவா மற்றும் அதியமான்

K.R.அதியமான் said...

///// The entire land would be transferred to the company by the government at a price of Rs 50 lakh (Rs 5 million) with all the concessional provisions, the Mohammed Ali Shabbir information and public relations minister told the media.

The concessions offered to the Microsoft centre include Rs 20,000 rebate on each job created, reimbursement of 50 per cent of stamp duty on the first transaction and all the infrastructural facilities at the doorsteps that includes the laying of the road connecting the development centre with the Old Bombay highway.

The road alone will cost the government about Rs 15 crore (Rs 150 million) that includes the cost of land acquisition, around Rs 2 crore (Rs 20 million) on power lines, about Rs 50 lakh (Rs 5 million) on drainage facilities among others.//

ஹைதராபாத்தில் it city இருக்கும் இடத்தில் ஒரு ஏக்கர் இடம் சில கோடிகள் என்பதை கவனத்தில் கொள்ளவும்.இது ஒரு சின்ன உதாரணம் தான்!

இதைப்போல வேறு எதாவது துறைக்கு அரசு உதவுமா?////

இந்த வெலை எல்லாம் அதெல்லாம் அய்.டி வந்த பிறகுதான். சந்திரபாபு நாயடு எந்த முயற்சியும் எடுக்காம இருதிருந்தா கண்டிப்பாக அய்திராபாத் இவ்வளவு வளர்ந்திருகாது.
போபால் மாதிரி இருந்திருக்கும். நில‌ விலை, வேலை வாய்ப்பு, வ‌ரி வ‌சூல் எல்லாம் இந்த‌ அள‌வுக்கு உய‌ர்ந்திருகாதுங்கோ..

1990க‌ளின் பிற் ப‌குதியில் மைக்ரோஸாஃப்ட் நிறிவ‌ன‌தை உல‌கின் பல நாடுகள் அழைத்தார்கள். பில் கேட்ஸ் அய்திராபாத் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
பல பல நாடுகள், நகரங்களில் இருந்து அழைப்புகள். சலுகைகள் குடுக்காமல், அன்று மைக்ரோஸாஃப்ட் அங்கு சென்றிருக்காது. நாய்டு அவ்வாறு செய்யாவிட்டால் சென்னைக்கோ, பெஙக்ளூருக்கோ அந்த சான்ஸ் அடித்திருக்கலாம். ஹும்..

மேலும் சைனா, ஜ‌ப்பான், பில்ப்பைன்ஸ், ர‌ஸ்யா என்று ப‌ல‌ர் வ‌லை வீசின‌ர்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
//அப்போ மாருதி கார் தனியார் என்று சொல்விங்களா? 49% சுசுகி, 51 % இந்தியாவிடம் இருக்கு அதில் பங்குகள்.//

மீண்டும் தவறு. மாருதி சுசுகியின் கடைசி நிதி அறிக்கையின் படி. அரசின் பங்கு உரிமை 0% என உள்ளது.
==>

"மாருதி உத்யோக்"க "மாருதி சுசுகின்னு" மாத்தியாச்சு.மாருதிங்கறது ப்ராண்ட் பேருக்காக. இல்லைனா அதயும் நீக்கிடுவாங்க. அதாவது, இது முழுக்க முழுக்க ஜப்பானியருக்கு(திரு.சுசுகி) சொந்தமானது.[நேற்றே எழுதனும்னு நினைச்சேன்.முடியலே]

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
K.R.அதியமான். 13230870032840655763 said...

I was speaking about the ripple effect of some much savings and spendings by IT employees.

And pray what statistics did you provide ? there some 12 lac IT people who on the average earn some 3 lacs p.a and pay some 1 lac p.a as income tax. that is roughly
12 lac X 1 lac rupees p.a tax :
1,20,00,00,00,000 rupees.
12,000 crores approx. ok..
is any other group of 12 lac empoyees paying so much tax ?

and most importantly who will provide alternate employment to this million, if there was no IT.
Can you ?
==>
k.r.அதியமான்
அ..துதுதுதுது.
நீங்க கொஞ்சம் லேட்டு.
பரவாயில்லை இப்படியெல்லாம் மத்தவங்க பேசுவாங்கன்னு இப்போ புரிஞ்சுக்க எனக்கு(நமக்கு) இது ஒரு வாய்ப்பு.
இதெல்லாம் மென்பொருள் துறையில் இல்லாதவங்களுக்குப் புரியாது, ஏனெனில், இவர்கள் உண்மையான/நம்பத்தகுந்த விபரங்களை வைத்துப் பேசுவதில்லை.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வவ்வால், உங்களுக்காக்,

இன்றைய செய்தி

1. Core salaries hit the roof, Software is no more the best Pay Master
2. UMPP projects likely to get duty concession
[Each UMPP cost around Rs.5000 crores]
UMPP-அப்படின்னா?
கூகிளில் தேடிப்பாருங்க.

இத மாதிரி தினமும் மென்பொருள் துறையில் இல்லாதவர்கள் படித்தால், கொஞ்சம் வயிற்றெரிச்சலாவது குறையும்.

said...

///இனி,அவர் பொத்திக்கொண்டு ஓடட்டும்:-)) ///

**** EDITED *** நீதான் ஒரு அரவேக்காடு.

மொதல்ல இந்த அய்.டி கம்பேனிகள் அனைத்யையும் கொளுத்தி அழித்தா போதும். இந்தியா சுப்ட்சமாகும்.....

--- K.R.அதியமான்

enRenRum-anbudan.BALA said...

//
என்றென்றும் பாலா. பின்னியாச்சு. அரை சதம். அப்படியே, பின்னூட்டத்தில 50 என்ற எண் ஃப்ளாஷ் ஆகிற மாதிரி எதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.
//
நன்றி, சிவா :) அத அப்படி பிளாஷ் பண்ண வைக்கறது என்ற விஷயம் நான் அறியாதது :(

ஒரு சிறப்பான விவாதத்திற்கும், பல உருப்படியான தகவல்களுக்கும், உங்களுக்கும், அதியமானுக்கும், வவ்வாலுக்கும், (அனானிகளுக்கும்) என் பாராட்டை தெரிவித்தே ஆக வேண்டும் ! கொஞ்சம் பிஸியாக இருப்பதால், உங்கள் கருத்துகள் குறித்து எனது மறுமொழியை உடனடியாக தர இயலாது, மன்னிக்கவும்.

எ.அ.பாலா

வவ்வால் said...

அதியமான் ,

நீங்க ரொம்ப புள்ளிவிவரத்தோடு பேசுவதாக நினைத்துக்கொண்டு இருக்கிங்க.

//And pray what statistics did you provide ? there some 12 lac IT people who on the average earn some 3 lacs p.a and pay some 1 lac p.a as income tax. that is roughly
12 lac X 1 lac rupees p.a tax :
1,20,00,00,00,000 rupees.
12,000 crores approx. ok..
is any other group of 12 lac empoyees paying so much tax ?//

3 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஒரு லட்சம் வரிக்கட்டுறாங்களா :-))

இதோ ஒருவர் 3 லட்சத்திற்கு கட்ட வேண்டிய வரி(எந்த வித வரி சலுகையும் இல்லாமல் இது, வீட்டு லோன் வாங்கி இருந்தால் கட்டும் வரி குறையும்)

ஆண்டு வருமானம் 3 லட்சம் உள்ளவர் கட்ட வேண்டிய வரி:
1,10,000= வரி இல்லை,
1,10,000 - 150,000- 10%
எனவே 40,000 க்கு 10 சதம் வரி =4,000
1,50,001- 2,50,000 வரை 20 சதம் வரி

இதில் 1,00,000 க்கு 20 சத வரி = 20,000
2,50,001- 1,000,000 வரை 30 சதம் வரி,

எனவே 50,000 க்கு 30 சத வரி =15,000

மொத்தம் மூன்று லட்சத்திற்கு வரி= 4000+20,000+15,000= 39,000 ரூபாய்கள் மட்டுமே வரி.

//and most importantly who will provide alternate employment to this million, if there was no IT.
Can you ?//

இங்கே யாரும் it துறையே வேண்டாம் என்று சொல்லவில்லையே, கொடுத்த சலுகையை வைத்துக்கொண்டு திருப்தி அடையாமல் மேலும் கேட்காமல் இருக்க தான் சொல்றாங்க!

---------------------------
சிவா,
//வவ்வால் நீங்க பேசுவது வேடிக்கையாய் இருக்கிறது. இல்லாத துறைக்கு / கம்பெனிக்கு எப்படி சலுகை கிடைக்கும்?. கம்பெனியை ஆரம்பிக்காமல் சலுகைய எதிர்ப்பார்ப்பது எப்படி என்று எனக்கு புரியவில்லை.//

நீங்க தான் புரியாம பேசுறிங்க அப்போ it தவிர வேற எந்த துறையுமே இல்லையா என்ன கொடுமை சார் இது :-))

இப்போ டாடா கார் தயாரிக்க நந்திக்கிராமத்தில் நிலம் கொடுக்க எவ்வளவு பிரச்சினை ஆச்சு?

இதே போல கடலூரில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதிலும் பிரச்சினை இல்லையா?

ஆனால் சலுகையே தரவேண்டாம், ஆரம்பிக்க விட்டால் போதும் என்ற நிலைத்தான் மற்ற துறைகளுக்கு.

இங்கே யாரும் it இழுத்து மூட வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்கள் ஒரு "சிறப்பு உயிரினம்" என்பது போல அதிகப்படியான வசதிகளை அரசிடம் கேட்பதை தான் சொல்கிறோம்.

மற்ற துறைகளுக்கு என்ன கிடைக்குதோ அதை வைத்துக்கொண்டு , it உம் வளரட்டுமே, எதுக்கு சிறப்பு கவனிப்பெல்லாம்.

டாடா ஸ்டீலில் மட்டும் 82,700 பேர் வேலை செய்றாங்க, கார்ப்பரேட் வரி மட்டும் 8000 கோடிக்கும் மேல்,
ஆனால் ஒரு லட்சம் ஊழியர்கள் இருக்கும் tcs கட்டும் கார்ப்பரேட் வரி 900 கோடி(இந்தியாவில் அதிகம் வரிக்கட்டும் it company)

கூட்டிக்கழித்துப்பாருங்கள் it துறை ஒன்றும் பெரிதாக அரசுக்கோ, பொதுமக்களுக்கோ பணத்தை அள்ளிக்கொடுக்கவில்லை, அங்கே வேலை செய்பவர்களுக்கு மட்டுமே லாபம்!

இதுக்கும் மேலவும் சொல்லிப்புரியவைக்க தேவை இல்லை, இனிமேல் நீங்கள் பேசுவது எல்லாம் , உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் பேசும் வீண் வரட்டு வாதமாகத்தான் இருக்கும்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வவ்வால்,
உங்களுக்குத் தெரியுமா?
கப்பல் துறையில் முதலீடு செய்தால் 30 சதவீதம் அரசு மானியம் கொடுக்கிறது. அது இந்த ஆண்டுடனோ,அடுத்த ஆண்டுடனோ முடிவைகிறது. அதை மத்திய அரசு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. அதற்க்கான சுட்டி இதோ
http://www.microdata.in/advantage_india.html
இப்பாவது புரிந்து கொள்வீர்கள், மற்ற துறைகளுக்கும் சலுகைகள் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றன.

இதேபோல், அரசு ஐ டி த்துறைக்கென ஏதாவது சலுகை அளித்ததை உங்களால் காட்ட முடியுமா?
அல்லது
யாராவது ஐடித்துறையாளர்கள் மற்ற துறைக்கில்லாத அதிகபட்ச சலுகை கேட்டதை காட்ட முடியுமா?

ஏதோ, ஹைதராபாத்தில் நிலம் / தண்ணீர் கொடுத்ததுன்னு அதையே சொல்லாதீர்கள். அது, ச.பாபு நாயுடு, அவர் மாநிலதில் ஐ டித்துறைக்கு முன்னுரிமை கொடுக்கணும்னு செய்தது.

K.R.அதியமான் said...

//மொத்தம் மூன்று லட்சத்திற்கு வரி= 4000+20,000+15,000= 39,000 ரூபாய்கள் மட்டுமே வரி.///

ok. but that is the tax for a 3,00,000 p.a salary. is it the average sal of all IT people ? it may be even higher at say 5 lacs (as you may be knowing better as an IT person 1).

even then, 5000 crores p.a is a huge sum as tax revenue for govt.
and add the corporate tax and service tax. it may cover the annual Rural employment gurantee scheme expenses. ok.

even most important is the secondary effects and 'trickle down' effects of IT income and spening on consumer and other services, etc.

can anyone refute this ?

வவ்வால் said...

சிவா,

வேறு எந்த கம்பெனியோ தொழிலோ இல்லை என்று பேச ஆரம்பித்த உங்களுக்கு இப்போ கப்பல் தொழிலுக்கு 30 சத மானியம் தராங்கனு எப்படி ஞானோதயம் வந்துச்சு? அந்த தொழிலை எல்லாம் ஆரம்பிக்க அவ்வளவு ஆட்கள் முன்வருவதே வருவதே இல்லை, ஆனால் அத்தொழிலும் இருக்கணும்,கப்பல் தொழிலுக்கு வருபவர்களை ஊக்குவிக்க மான்யம் அளிக்கப்படுகிறது. சவலைப்பிள்ளைக்கு தான் நல்ல சாப்பாடு போடனும்.

மேலும் என்ன சொன்னாலும் நாட்டிலே மொத்தம் 12 லட்சம்(அதியமான் சொன்ன data) இருப்பவர்கள் தான் இந்தியாவில் எல்லாமும் என்ற உங்களின் எண்ணம் மாறப்போவதில்லை, கோடிக்கணக்கான மற்ற துறை ஊழிர்களால் எதுவும் நாட்டுக்கு வருமானே இல்லை :-))


-----------------------------

அதியமான்,

என்ன சொல்வது, முதலில் 3 லட்சம் என்றீர்கள் நீங்கள் சொன்ன வரி தப்பு என்றதும் 5 லட்சம் என்கிறீர்கள், விட்டா it வேலை செய்ற எல்லாருக்கும் 10 லட்சம் சம்பளம் என்று சொல்வீர்கள் போல!

உங்களுக்கு ஒரே ஒரு டாடா ஸ்டீல் 8000 கோடி வரிக்கட்டுவது கூட பெரிசா தெரியலை, ஆனால் 5000 கோடிக்கட்டுறது பெரிசா தெரியுதே, எப்படி கூட்டினாலும் மற்ற துறை வரி வருமானம் அதிகம்னு எப்படி புரியும் உங்களுக்கு? அதுக்குலாம் "minimum common sense" தேவை! :-))

------------------------------
குருடர்கள் யானைத்தடவிப்பார்ப்பது போல பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது, எனவே தேவையான அளவு விவரங்களை சொல்லிவிட்டதால் , இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.புரியணும்னா புரிந்து இருக்கும், புரிந்துக்கொள்ளவே மாட்டேன் என்பவர்களுக்கு புரியாது :-))

said...

வவ்வால் said
//டாடா ஸ்டீலில் மட்டும் 82,700 பேர் வேலை செய்றாங்க, கார்ப்பரேட் வரி மட்டும் 8000 கோடிக்கும் மேல்//

வவ்வால், மீண்டும் உங்கள் விவரங்கள் தவறாக இருக்கிறது. டாடா ஸ்டீலின் இணைய தளத்தில் சுமார் 40,000 பேர் வேலை செய்வதாக இருக்கு.
www.tatasteel.com/corporatesustainability/emp_gen.asp

//கூட்டிக்கழித்துப்பாருங்கள் it துறை ஒன்றும் பெரிதாக அரசுக்கோ, பொதுமக்களுக்கோ பணத்தை அள்ளிக்கொடுக்கவில்லை, அங்கே வேலை செய்பவர்களுக்கு மட்டுமே லாபம்!//

IT துறை இல்லை என்றால் அந்த 1000 கோடிக்கு மேலான வரிகளை யார் செலுத்தியிருப்பாங்க, அந்த தொகை அரசாங்கத்துக்கு இழப்பில்லயா . மேலும் 10 லட்சம் இளைஞர்களுக்கு/குடும்பங்களுக்கு வேற எந்த துறை வேலை மற்றும் நல்ல சம்பளம் கொடுத்திருக்கும் ?

//ஆனால் சலுகையே தரவேண்டாம், ஆரம்பிக்க விட்டால் போதும் என்ற நிலைத்தான் மற்ற துறைகளுக்கு....//

சார் அதுதான் நாங்களும் சொல்லறோம். எந்த துறையானாலும் நிறுவனம் தொடங்க்குவத்ர்க்கு இருக்கும் எல்லா தடைகளையும் தளர்த்த வேண்டும்.
தொழில் தொடங்க்குவதுதில் தடைகள் இருப்பது சந்தையில் போட்டியை குறைக்கும். அது போன்ற தடைகள் நல்லதல்ல.

தடைகள் அதிகம் இருப்பதால் பாதிக்க படுவது சாதரண மனிதன்தான்.

தொழில் தடைகளை தளர்த்துமா நமது அரசு ?????

தேவையில்லா தடைகளை நீக்காமல் இருக்கும் அரசின் மீதுதான் நமது கோபத்தை கட்ட வேண்டும்.
இங்கே வில்லன் அரசு, IT துறை அல்ல.

நன்றி சிவா மற்றும் அதியமான்

வவ்வால் said...

அனானி,

அரசாங்கம் தடையை எடுக்கணும் என்பதை மட்டும் சொல்றிங்க கொடுத்த சலுகையே அதிகம் இனிமேலும் சலுகை கொடு என்று it கேட்பது கூடாது என்பதும் சரி தானே அப்போ!

//வவ்வால், மீண்டும் உங்கள் விவரங்கள் தவறாக இருக்கிறது. டாடா ஸ்டீலின் இணைய தளத்தில் சுமார் 40,000 பேர் வேலை செய்வதாக இருக்கு.
www.tatasteel.com/corporatesustainability/emp_gen.asp
//

"The company was also recognised as the world's best steel producer by World Steel Dynamics in 2005. The company is listed on BSE and NSE; and employs about 82,700 (2007) people [2]."

இது விக்கியில் உள்ளது, டாடா ஸ்டீலில் உள்ளது என்ன என்பதையும் பார்க்கிறேன், சரி 3 லட்சத்துக்கு ஒரு லட்சம் வரினு சொன்னாரே அதியமான் அப்போலாம் சத்தமே வரலையே உங்க கிட்டே :-))(அது தவறான தகவலாக இருந்தாலும் உங்களுக்கு இனிப்பான தகவல் அல்லவா)

டாடா ஸ்டீல் தளத்தில் உள்ளது,

Established in 1907, Tata Steel is the world's 6th largest steel company with an aggregate of annual crude steel production capacity of around 28 million tonnes having approximately 82,700 employees across the four continents.

வெளிநாட்டிலும் அவர்களுக்கு வேலை செய்கிறார்கள் என்பதே கூடுதல் தகவல்,ஆனால் 82,700 என்பது தான் எண்ணிக்கை!
http://www.tatasteel.com/company/profile.asp

அப்போ இந்தியாவில் இருக்கவங்க மட்டும் தான் சொன்னேன் என்றால், tcs க்கும் வெளிநாட்டில் வேலை செய்பவர்களை எல்லாம் சேர்த்து தான் ஒரு லட்சம் ஊழியர்கள்.

நீங்க சொன்ன 40,000 என்பது எங்கும் காணக்க்கிடைக்கவில்லையே?

அனானி எதாவது சொல்லவேண்டும் என்பதற்காக அனானி அவதாரம் எடுத்து வந்து நேர விரயம் செய்ய வேண்டாம்.

said...

<==
//அப்போ மாருதி கார் தனியார் என்று சொல்விங்களா? 49% சுசுகி, 51 % இந்தியாவிடம் இருக்கு அதில் பங்குகள்.//

மீண்டும் தவறு. மாருதி சுசுகியின் கடைசி நிதி அறிக்கையின் படி. அரசின் பங்கு உரிமை 0% என உள்ளது.
==>

"மாருதி உத்யோக்"க "மாருதி சுசுகின்னு" மாத்தியாச்சு.மாருதிங்கறது ப்ராண்ட் பேருக்காக. இல்லைனா அதயும் நீக்கிடுவாங்க. அதாவது, இது முழுக்க முழுக்க ஜப்பானியருக்கு(திரு.சுசுகி) சொந்தமானது.[நேற்றே எழுதனும்னு நினைச்சேன்.முடியலே]

11:37 AM, February 20, 2008
**********************************

<==
K.R.அதியமான். 13230870032840655763 said...

I was speaking about the ripple effect of some much savings and spendings by IT employees.

And pray what statistics did you provide ? there some 12 lac IT people who on the average earn some 3 lacs p.a and pay some 1 lac p.a as income tax. that is roughly
12 lac X 1 lac rupees p.a tax :
1,20,00,00,00,000 rupees.
12,000 crores approx. ok..
is any other group of 12 lac empoyees paying so much tax ?

and most importantly who will provide alternate employment to this million, if there was no IT.
Can you ?
==>
k.r.அதியமான்
அ..துதுதுதுது.
நீங்க கொஞ்சம் லேட்டு.
பரவாயில்லை இப்படியெல்லாம் மத்தவங்க பேசுவாங்கன்னு இப்போ புரிஞ்சுக்க எனக்கு(நமக்கு) இது ஒரு வாய்ப்பு.
இதெல்லாம் மென்பொருள் துறையில் இல்லாதவங்களுக்குப் புரியாது, ஏனெனில், இவர்கள் உண்மையான/நம்பத்தகுந்த விபரங்களை வைத்துப் பேசுவதில்லை.

11:43 AM, February 20, 2008
*********************************

வவ்வால், உங்களுக்காக்,

இன்றைய செய்தி

1. Core salaries hit the roof, Software is no more the best Pay Master
2. UMPP projects likely to get duty concession
[Each UMPP cost around Rs.5000 crores]
UMPP-அப்படின்னா?
கூகிளில் தேடிப்பாருங்க.

இத மாதிரி தினமும் மென்பொருள் துறையில் இல்லாதவர்கள் படித்தால், கொஞ்சம் வயிற்றெரிச்சலாவது குறையும்.

11:48 AM, February 20, 2008
*********************************

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வவ்வால்,
வேற எந்தத்துறையுமே இல்லைன்னு நான் சொன்னதா நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டா யார் என்ன பண்ண முடியும்?

<==
வவ்வால் said
அந்த தொழிலை எல்லாம் ஆரம்பிக்க அவ்வளவு ஆட்கள் முன்வருவதே வருவதே இல்லை, ==>
அதத்தாங்க நானும் சொல்ரேன்,எதுக்குச் சந்தையில மதிப்பு/நன்மை/லாபம் இருக்கோ, எதுனால அதிக வளர்ச்சிய குறைந்த காலத்துல நம்ம நாட்ல உள்ள மூல்பொருட்கள வச்சு நடத்த முடியுமோ அதத்தான் ஆரம்பிப்பாங்க.

அந்தந்த துறைகள்ள கிடைக்ககூடிய நன்மை/லாபத்துக்கும் மற்றும் நாட்டுக்கு அதனோட தேவையைப் பொருத்தும், அரசாங்கம் சலுகை தீர்மானிக்கும்.
<==
வவ்வால் said
மேலும் என்ன சொன்னாலும் நாட்டிலே மொத்தம் 12 லட்சம்(அதியமான் சொன்ன டட) இருப்பவர்கள் தான் இந்தியாவில் எல்லாமும் என்ற உங்களின் எண்ணம் மாறப்போவதில்லை, கோடிக்கணக்கான மற்ற துறை ஊழிர்களால் எதுவும் நாட்டுக்கு வருமானே இல்லை :-) ==>

அப்படியெல்லம் யாரும் சொல்லல.

மற்ற துறைகள் வளர பல மாமாங்கங்கள் ஆச்சு. இப்போதும் அந்தத்துறைக்கு தேவையிருந்தா அது வளரும். அத யாரும் இல்லைன்னு சொல்லல.

மற்ற துறை ஊழியர்களால் வருமானம் ரொம்ப குறைவாயிருக்கும். அதுக்குத்தான் பொறியியல் கம்பெனியில் என்னோட ஆரம்ப கால ஊதியத்தைச் சொன்னேன். இப்பொது அதே வேலையைப் பார்த்தேன்னா, எனக்கு என்ன வருமான கிடைக்கும்னும் சொன்னென், அவ்வருமானத்தை இப்போதைய மென்பொருள் வருமானத்துடன் ஓப்புநோக்குவதற்க்காக.

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லை.
1. மென்பொருள்துறையிலிருந்து யார்,எவ்விதமான சலுகை, அதுவும் மற்ற துறைகளுக்கு இல்லாத தனிச்சலுகையை கேட்டாங்க?

2. மற்ற துறைகளுக்குச் சலுகையே இல்லயா?
[இதுக்கும் உதாரணம் கொடுத்தாச்சு. கப்பல் துறை,மின் துறை சலுகைகள்]

3. நீங்க சொன்ன மாதிரி ஐடித்துறைக்கு சலுகைகள் தேவையில்லைன்னா, எதுக்கு கேரள/மே.வங்க அரசுகள்கூட ஐ டி பார்க்,டெக்னொபார்க் அமைக்கணும்? அவங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு?

உங்களோட பல தகவல்கள் நல்ல உபயோகமா இருந்துச்சு
1. மாருதியப் பத்திய நல்ல(தப்பு தப்பா) தகவல்கள்
2. மென்பொருளாளர்க்கு லே-ஆஃப்
3. மென்பொருள்துறைக்கு நிலம்/தண்ணீர் சலுகை (அப்படி ஒண்ணுமே நடக்கல.ஹதரபாத்தில் ச.பாபு நாயுடு அவர் மாநிலத்தில் ஐ டி துறை வரணும்னு செய்தது.)

இன்னைக்கு எக்கானமிக் டைம்ஸில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராசாவோட கட்டுரை "தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி, சவால்கள், தேவைகள்"னு வந்திருக்கு.

<==
வவ்வால் சொல்ரார்
குருடர்கள் யானைத்தடவிப்பார்ப்பது போல பேசிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது, எனவே தேவையான அளவு விவரங்களை சொல்லிவிட்டதால் , இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.புரியணும்னா புரிந்து இருக்கும், புரிந்துக்கொள்ளவே மாட்டேன் என்பவர்களுக்கு புரியாது :-)) ==>

இப்படி பாதியில் "சட்"னு ஆட்டத்த நிறுத்திட்டு போய்ட்டா எப்படிண்ணா? இப்போதான் 70 கமெண்ட் வந்திருக்கு. ஒரு நூறாவது அடிப்போம்ணா. சரி பரவால்ல, இன்னொரு தளத்தில பாக்கலாம். வாய்ப்பு கிடைக்காமலா போய்டப்போவுது? உங்களுக்கும் நீங்க சொல்ல வரதுக்குண்டான ஆதாரங்கள் எதுவும் இல்ல. எவ்வளுவுதான் நீங்க மொட்ட கட்டயாகவே சொல்லிட்டு இருக்கரது.

கடைசியா ஒரு சொந்தக் கேள்வி - வேற துறைக்குப் போகாம, இவ்ளோ சரியில்லாத ஒரு துறையில எதுக்குண்ணா இருக்கீங்க?

வவ்வால் said...

சிவா,

////அப்போ மாருதி கார் தனியார் என்று சொல்விங்களா? 49% சுசுகி, 51 % இந்தியாவிடம் இருக்கு அதில் பங்குகள்.//

மீண்டும் தவறு. மாருதி சுசுகியின் கடைசி நிதி அறிக்கையின் படி. அரசின் பங்கு உரிமை 0% என உள்ளது.//

இந்தியாவிடம் இருக்குனு சொல்லி இருக்கேன், இந்திய அரசிடம்னு சொல்லலை, அந்த பங்குகளை இந்தியாவில் இருப்பவங்க மட்டுமே வாங்க விற்க முடியும்,இப்போதைய நிலவரப்படி 54 சதம் சுசுகி இடம் இருக்கு, மீதி பங்கு முழுவதும் இந்திய முதலீட்டாளர்களிடம் இருக்கு.

முதன் முதலில் மாருதி நிறுவனம் ஆரம்பித்த போது அன்னிய நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகம் ஆகிவிடக்கூடாது என்பதால் ஒரு விதிப்போட்டார்கள்,100 சதம் பங்கையும் சுசுகியால் வாங்க முடியாது, அரசே ஏதேனும் சட்ட திருத்தம் போட்டால் ஒழிய.

முன்னர் முரசொலி மாறன் இருந்த போது மாருதி ceo பதவி நியமிக்க ஏற்ப்பட்ட சண்டையை அறிவீர்களா?

அப்புறம் கண்ணைம்மூடிக்கொண்டு இருக்காதீர்கள், 3 லட்சத்திற்கு ஒரு லட்சம் வரி என்பதை உண்மையா?

அதனை
//இதெல்லாம் மென்பொருள் துறையில் இல்லாதவங்களுக்குப் புரியாது, ஏனெனில், இவர்கள் உண்மையான/நம்பத்தகுந்த விபரங்களை வைத்துப் பேசுவதில்லை.
//

அடப்போங்கய்யா நீங்களும் உங்க உண்மையும், அது தவறுனு அப்போவே நான் விளக்கிட்டேன் அதைக்கூட பார்க்க முடியலை பேச வந்துட்டிங்களே!இன்னொரு தடவை நான் போட்ட பின்னூட்டத்தை படிங்க!
(உண்மைல நீங்க 3 லட்சம் சம்பளம் வாங்கினா ஒரு லட்சமா வரிக்கட்டுறிங்க :-)))

உங்கள் மூலமாக எப்படிலாம் குருட்டாம் போக்காக பேசுவாங்க என்பதையும் அறிந்துக்கொள்ள முடிந்தது :-))

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வவ்வாலண்ணா,
வவ்வால்கள் இரவில்தான் வேலை செய்யும்(இரை தேடும்) பகல்ல செய்யாது(தூங்கும்)ன்னு சொல்வாங்க. நீங்க, பகல்ல ஓவர் டைம் பார்கிரீங்களேண்ணா.

எங்கே கோவிச்சுட்டுப் போய்டுவீங்களோண்ணு நினைச்சுட்டேன்.
திரும்ப வந்ததுக்கு நன்றிங்கண்ணா.

இதோ இதையும்
http://stock-siva.blogspot.com/2008/02/21022008.html கொஞ்சம் சிரமம் பார்க்காம படிச்சுப்போடுங்கண்ணா.
ஆனா, மத்தவங்க வயிரெரிஞ்சா நான் பொறுப்பில்ல.இப்பவே சொல்லிட்டேன்.

<==
உங்கள் மூலமாக எப்படிலாம் குருட்டாம் போக்காக பேசுவாங்க என்பதையும் அறிந்துக்கொள்ள முடிந்தது :-))
==>
ஆமாண்ணா, உங்கள மாதிரி ஒரே ஒரு விஷயத்தை(டாட்டா ஸ்டீல்) வைச்சு வேர எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாம, ரொம்ப புத்திசாலியா(?) எங்களாயெல்லாம் பதில் சொல்ல முடியாதுண்ணா.

முக்கால் செஞ்சுரி வரைக்கும் அடிச்சாச்சுண்ணா, பெரிய மனசு பண்ணி, கொஞ்சம் கை கொடுத்தீங்கண்ணா, 100 அடிச்சுரலாம்ணா.

வவ்வால் said...

tax wage expense
tcs = 904.05 2,000.19

total= 2904.24

wipro= 765.2 4,279

total= 5044.2

tata = 8,426.76 1,291
steel
total=9717.76

இதில் இருந்து தெரிய வருவது , அரசுக்கு கட்டும் வரியை விட ஊழியர்களுக்கு தான் அதிக சம்பளம் அளிக்க it நிறுவனங்கள் செலவிடுகின்றது.

மேலும் சம்பளம் , வரி என்று ஒரு நிறுவனம் செலவு செய்யும் மொத்த தொகையை ஒப்பிட்டால், அப்பொழுதும் டாடா ஸ்டீல் செலவழிக்கும் தொகை அதிகமாக வருவதைக்காணலாம்.

எனவே அரசுக்கு அதிக வருவாய் தருவது எது என்று பார்த்தாலும் டாடா ஸ்டீல் தான் முன்னனியில் இருப்பதும் தெரியவரும்.

மென்பொருள் துறையால் அதிக பலன் நாட்டுக்கு என்பதை விட அதன் ஊழியர்களுக்கே என்பது புரியும்.ஊழியர்களுக்கு நன்மை இல்லாமலா இருக்கட்டும், ஆனால் மற்ற எல்லாரையும் விட நாங்களே தியாகிகள் என்ற ரேஞ்சில் சொல்லிக்கொள்வது தான் இடிக்கிறது :-))

K.R.அதியமான் said...

ShivA@ Saamaniyan,

Pls don't waste your time n further arguments. all waste and useless.

The huge salaries earned by the IT employees (and others too) are either saved or spent. both help the economy by creating capital and boosting demand for services and goods. for e.g : the IT people spending on food, cloths, entertainment, travel, purchase of many other items boosts the demand for those goods and services. For e.g : there is an acute demand for
drivers, housemaids, ironing people, security service people, plumbers, electricians in chennai and not in Bihar or Jameshdpur, where there is no IT. so employment is created in secondary effect/ ripple effect.

it is a complex process of capitalism and market economics and no need to explain to idiots who argue for the sake of arguing.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

வவ்வாலண்ணா,சூப்பர்ணா. இதே மாதிரி பிக்கப் பண்ணுங்கண்ணா. ஒரே விபரங்களா(எண்களா) சேகரிங்கண்ணா. குத்து மதிப்பா பேசறதவிட எண்கள் தான் பேசணும்ணா. இதப்பார்த்து தமிழ் மணமே பார்த்து அதிரணும்னா. குறைந்த பட்சம் "என்றென்றும் பாலாவே" நாம அளிக்கிர விவரங்களை (நம்ம கமெண்ட் போடுற வேகத்தைப் பார்த்து) கமெண்ட் மட்டுறுத்துதலை இப்பதிவுக்கு மட்டும் எடுத்திடணும்னா.

அப்படியே எவ்வளவு சலுக்கைகள்ங்கற விவரத்தை(எண்கள்) போடுங்கண்ணா. நாம இந்தப்பதிவுலகுக்கு செய்ர பெருந்தொண்டா நினைச்சுக்குவோம்ணா.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
K.R.அதியமான். 13230870032840655763 said...
ShivA@ Saamaniyan,

Pls don't waste your time n further arguments. all waste and useless.
==>
தங்களது அறிவுரைக்கு நன்றி.
வவ்வால் இப்பத்தான் டேட்டா(எண்கள்)வோட வந்திருக்கார். இவ்விவாதத்துக்குண்டான எல்லா எண்களும் அவரால் கொடுக்க முடிஞ்சதுண்ணா, அவரோட வாதம் சரின்னு ஒத்துக்கலாம். நாம "நானா நீயான்னு" சண்டையா போடறோம்?

ஏதோ ஒரு உண்மையை கண்டுபிடிக்கல்ல புறப்பட்டு இருக்கோம்.

வவ்வாலண்ணா, நீஙக ஆட்டத்த ஆடுங்கண்ணா. யாருமே இல்லாட்டியும் நாம 2 பேரும் விளையாடுவோம்.

said...

//சரி 3 லட்சத்துக்கு ஒரு லட்சம் வரினு சொன்னாரே அதியமான் அப்போலாம் சத்தமே வரலையே உங்க கிட்டே :-))(அது தவறான தகவலாக இருந்தாலும் உங்களுக்கு இனிப்பான தகவல் அல்லவா)//

entry level employee சம்பளம் 3 லட்சம்.
ஆனால் IT துறையின் average salary 6.2 லட்சம்

ஆண்டு வருமானம் 6.2 லட்சம் உள்ளவர் கட்ட வேண்டிய வரி:
1,10,000= வரி இல்லை,
1,10,000 - 150,000- 10%
எனவே 40,000 க்கு 10 சதம் வரி =4,000
1,50,001- 2,50,000 வரை 20 சதம் வரி

இதில் 1,00,000 க்கு 20 சத வரி = 20,000
2,50,001- 1,000,000 வரை 30 சதம் வரி,

மீதி 3.7 லட்சத்திற்கு 30% வரி = 1,11,000

மொத்தம் = 4,000+20,000+1,11,000 = 1,35,000.

//நீங்க சொன்ன 40,000 என்பது எங்கும் காணக்க்கிடைக்கவில்லையே?//

நான் கொடுத்த சுட்டியை பாக்கமலே சொன்னால் எப்படி. அவுங்க இணைய தளத்தில் இருந்து....
//Employment Generation
Today, Tata Steel has a total permanent workforce of about 40,000.//

http://www.tatasteel.com/corporatesustainability/emp_gen.asp

நீங்கள் சொல்வது போல வெளிநாட்டு ஆளுங்களை சேர்த்தல் (டாடா குழுமம் வாங்கிய கோரஸ் நிருவனத்தில் மட்டும் 50,000 பேர் வேலை செய்கிறார்கள்.) 87000 கணக்கு வரலாம்.
ஆனால் இந்தியாவில் 40,000 க்கும் கம்மியான வேலை ஆட்களே உள்ளனர்.

எப்படி டாடா ஸ்டீல் ஆட்குறைப்பு செய்திருக்கிறது என்பதை அறிய.
http://www.thehindubusinessline.com/bline/2002/05/11/stories/2002051100320500.htm

//அனானி எதாவது சொல்லவேண்டும் என்பதற்காக அனானி அவதாரம் எடுத்து வந்து நேர விரயம் செய்ய வேண்டாம்.//

இதுக்கு முன்பு உங்கள் தவறான விவரங்களை திருத்திய போது இல்லாத கோபம் x-( ..... ஹூம்....:-(


//அரசாங்கம் தடையை எடுக்கணும் என்பதை மட்டும் சொல்றிங்க கொடுத்த சலுகையே அதிகம் இனிமேலும் சலுகை கொடு என்று it கேட்பது கூடாது என்பதும் சரி தானே//

தடையும் வேண்டாம் சலுகையும் வேண்டாம் (எனது முதல் மறுமொழியிலெயே சொல்லிவிட்டேன்). இதுக்கு நீங்க ரெடியா.

//முக்கால் செஞ்சுரி வரைக்கும் அடிச்சாச்சுண்ணா, பெரிய மனசு பண்ணி, கொஞ்சம் கை கொடுத்தீங்கண்ணா, 100 அடிச்சுரலாம்ணா.//

இதுக்கு நான் ரெடி.

நன்றி சிவா மற்றும் அதியமான்.

இலவசக்கொத்தனார் said...

//அப்புறம் ஏற்கனவே சொல்லிட்டேன் ,சிட்டி பேங்க் ஆகட்டும் என்னவாகட்டும் அதுக்குலாம் பேரு மென்பொருள் சேவைனு, அதை எல்லாம் மென்பொருள் என்று சொல்லிக்காதிங்க, நான் சொன்னது , போட்டோ ஷாப், கோரல் டிரா, ஆட்டோ கேட், மாயா, விண்டோவ்ஸ், இதை எல்லாம் தான் மென்பொருள்னு, நீங்க சொல்றத எல்லாம் மென்பொருள்னு எந்த கடைல நுகர்வோர்க்கு விக்குறாங்க சொல்லுங்க? (உங்களுக்கு மென்பொருள் சேவைனா என்னா, மென்பொருள் பொது மக்களுக்காக என்னனு தனியா சொல்லனும் போல, ஆனால் இங்கே சிவா என்பவர் அது சரியா புரிஞ்சுக்கிட்டாரே எப்படி?)//

ஒரே நம்பரா இருக்கு, அதுல எது நம்பறாப்புல இருக்குன்னே தெரியலை! போகட்டும். ஆனா இந்த ஒரு விஷயம் டக்குன்னு கண்ணில் பட்டுச்சு. கொஞ்சம் அதைப் பத்தி மட்டும் பேசலாமேன்னுதான் வந்தேன். மத்தபடி மென்பொருள் துறை என்ற கைப்புளையை காப்பாத்தி கூட்டிக்கிட்டுப் போற அளவுக்கு நமக்கு நேர வசதியோ அல்லது எண்களைக் கரைத்துக் குடிக்கும் பொறுமையோ இல்லை. அதனால சொல்ல வந்ததை மட்டும் சொல்லிட்டு அப்படியே சைடில் குந்திக்கறேம்பா.

எது மென்பொருள், எது மென்பொருள் சேவை அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். ஒரு பொருளின் காப்புரிமை அதனை தயாரித்தவரிடம் இருக்க, அதனை பயன்படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்குத் தருவது என்பது மென்பொருள் என்பதின் விளக்கமாகக் கொள்ளலாம். அதுவே காப்புரிமை வேறொருவரிடம் இருக்க, அதனை நிறுவவோ அல்லது பேணவோ தனது சேவைகளைத் தருவது மென்பொருள் சேவை எனக் கொள்ளலாம். பொது மக்களுக்காகத் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் தவிர்த்த மற்ற அனைத்தும் சேவை என்பது சரியான வாதமே அல்ல.

இன்று இந்தியாவில் i-flex solutions (தமிழ்ப்'படுத்தாம' ஆங்கிலத்திலேயே எழுதறேன்.) உருவாக்கி இருக்கும் வங்கிகளுக்கான மென்பொருள் கடந்த 5 வருடங்களாக உலகத்திலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட வங்கி மென்பொருள். இவர்களுக்குப் போட்டியாக TCS மற்றும் Infosys நிறுவனத்தாரும் மென்பொருட்கள் தயாரித்துள்ளனர். இவைகளை பொது மக்கள் பயன்படுத்தவில்லை என்பதால் இவைகள் சேவையாக மாறிவிடுமா? முன்பு சொல்லப்பட்ட ATM மென்பொருளும் இது போலத்தான். (எந்த நிறுவனம் எனத் தெரியாது.) இது மட்டுமின்றி மிகச் சிலரே பயன்படுத்தும் பல பொருட்கள் இங்கு செய்யப்படுகின்றன. இதனை ஓகை அவர்களும் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆக நுகர்வோராக பொதுமக்கள் இல்லாமல் போனாலும் கூட இவை எல்லாம் மென்பொருட்களே.

ஆனால் வவ்வால் அவர்களின் அளவுகோல் வேறாக இருக்கும் போலிருக்கிறதே. என்னைப் போல் இரண்டாம் வகுப்பு முடிக்காதவர்களும் வந்து போகும் இடமாக இருப்பதால் தனியாச் சொல்லணுமா எனக் கேட்காமல் தனியாகச் சொல்லிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

said...

//ஒரு பொருளின் காப்புரிமை அதனை தயாரித்தவரிடம் இருக்க, அதனை பயன்படுத்தும் உரிமையை மட்டும் நுகர்வோருக்குத் தருவது என்பது மென்பொருள் என்பதின் விளக்கமாகக் கொள்ளலாம்.//
Super.

//பொது மக்களுக்காகத் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் தவிர்த்த மற்ற அனைத்தும் சேவை என்பது சரியான வாதமே அல்ல... ... ...
ஆக நுகர்வோராக பொதுமக்கள் இல்லாமல் போனாலும் கூட இவை எல்லாம் மென்பொருட்களே. //

நன்றி இலவசக்கொத்தனார்.

ச.சங்கர் said...

/////வவ்வால் said...
சிவா,

இந்தியாவிடம் இருக்குனு சொல்லி இருக்கேன், இந்திய அரசிடம்னு சொல்லலை, அந்த பங்குகளை இந்தியாவில் இருப்பவங்க மட்டுமே வாங்க விற்க முடியும்,இப்போதைய நிலவரப்படி 54 சதம் சுசுகி இடம் இருக்கு, மீதி பங்கு முழுவதும் இந்திய முதலீட்டாளர்களிடம் இருக்கு.//////

இதென்ன கலாட்டா...FII, P-Note மூலமா அல் கைதாவிலிருந்து அனைத்து மக்களும் இந்திய பங்கு சந்தைல பணம் போட்டு ஷேர் வாங்குறதா செய்தி வந்துக்கிட்டு இருக்கும் போது வவ்வால் இப்படி ஒரு போடு போட்டு விட்டார் :)

பாத்துங்க..ஒசாமா மாருதி ஷேர் வாங்கி வச்சுருந்தா கோவித்துக் கொள்ளப் போகிறார் :)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அனானி ஐயா, உங்கள் வருகைக்கும், விளக்கத்துக்கும்,ஆர்வத்துக்கும் மிக்க நன்றி.
<==
தடையும் வேண்டாம் சலுகையும் வேண்டாம் (எனது முதல் மறுமொழியிலெயே சொல்லிவிட்டேன்). இதுக்கு நீங்க ரெடியா.
==>
நாமெல்லாம் சம்பளத்துக்கு வேலை செய்ற ஊழியர்கள். அதனால, இத எளிதா சொல்லியிரலாம். தொழில் நடத்துரவனுக்குத்தான அதிலுள்ள சிரமம் தெரியும்.

இன்னைக்கு வந்த செய்தி
1. கனரக அமைச்சகம் அதி சொகுசு கார்களுக்கான(பெண்ட்லே,லம்பார்கிகினி,ஃபார்முல,பிஎம்டபிள்யு,ரோல்ராய்ஸ்) வரியை 60%(மொதத வரி 110%) லிருந்து 50% ஆக குறைக்கணும்னு பரிந்துரைத்துள்ளது.

இதெல்லாம்(cars) கோடி ரூபாயிக்குமேல் விலையுள்ளது.

இதெல்லம் இவங்க கண்ணுல தெரியாது.

இப்ப பிரச்னை என்னன்னா ஐ டித்துறைக்கு சலுகை, அதுவும் மத்தவங்களை விட அதிக சலுகை அப்படிங்கறதுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
அத ஐ டித்துறையில் இவ்வளவு ஊழியர்கள்,அவங்களோட சராசரி வருட வருமானம் இவ்வளவு என்று கணக்கிடுவதுபோல் எவ்விதமான யூகக் கணக்குகளும் பண்ண முடியாது.அதனால வவ்வால் அந்தக் கணக்கோட வரட்டும்.

எதோ ஒரு சி என் ஆர் ராவ், ஏதோ அவரால முந்தி மாதிரி பெங்களுருவில வசிக்க முடியலன்னு சொன்னத, ஒரு வேத வாக்கா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனக்குக்கூடத்தான் கடைக்குபோனா கூட்டமா (வாடிக்கையாளர்கள்)இருக்கரது பிடிக்கல. அதுக்காக என் ஒருத்தனுக்காக கடையை நடத்த முடியுமா என்ன?

<==
//முக்கால் செஞ்சுரி வரைக்கும் அடிச்சாச்சுண்ணா, பெரிய மனசு பண்ணி, கொஞ்சம் கை கொடுத்தீங்கண்ணா, 100 அடிச்சுரலாம்ணா.//

இதுக்கு நான் ரெடி.
==>
இது இதத்தான் எதிர்பார்த்தேன்.

said...

//நாமெல்லாம் சம்பளத்துக்கு வேலை செய்ற ஊழியர்கள். அதனால, இத எளிதா சொல்லியிரலாம். தொழில் நடத்துரவனுக்குத்தான அதிலுள்ள சிரமம் தெரியும்.//

சிவா அண்ணே,
தொழில் நடத்துவது கடினம்தான், நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நான் சலுகைகள் வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம். எந்த ஒரு துறைக்கோ அல்லது கம்பேனிக்கோ எப்படி சலுகையே நிர்ணயிப்பது என்று வரையறை இல்லை. நம்ம அரசியல்வாதிங்கள என்னால நம்ப முடியில, இவனுங்க சைடில் கட்டிங் வாங்கி கொண்டு கண்டபடி சலுகைகளை அள்ளி வீசலாம். இப்படி செய்தால் அதை ஈடுகட்டுவது சாதரன மனிதன் தான்.

இதற்க்கு பதிலாக எந்த தொழில் தொடங்குவதென்றாலும் தடைகள் இல்லை சுலபமாக செய்யலாம் என்ற நிலை வந்தால். யாரும் சலுகைகள் கேக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தொழில் தொடங்கி நடத்துவது சுலபம் என்பதால் அரசும் சலுகைகள் அளிக்க வேண்டாம்.

//1. கனரக அமைச்சகம் அதி சொகுசு கார்களுக்கான(பெண்ட்லே,லம்பார்கிகினி,ஃபார்முல,பிஎம்டபிள்யு,ரோல்ராய்ஸ்) வரியை 60%(மொதத வரி 110%) லிருந்து 50% ஆக குறைக்கணும்னு பரிந்துரைத்துள்ளது.//

சிவா அண்ணே, நீங்க ஒரு டப்பா காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யணும் என்றாலும் அதே 110% இறக்குமதி வரி கட்டியாக வேண்டும்.
110% வரி கொஞ்சம் ஓவரா தெரியல?

சாதா கார்களின் இறக்குமதிக்கு என்ன பொருத்த வரை 10-20% மேல வரி இருக்ககூடாது . (அதி சொகுசு கார்களுக்கு எவ்வளொ வரி வேணா வைத்து கொள்ளட்டும்)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
அனானி said

நம்ம அரசியல்வாதிங்கள என்னால நம்ப முடியில, இவனுங்க சைடில் கட்டிங் வாங்கி கொண்டு கண்டபடி சலுகைகளை அள்ளி வீசலாம். இப்படி செய்தால் அதை ஈடுகட்டுவது சாதரன மனிதன் தான் ==>
அனானி ஐயா,
லஞ்சம்/ஊழல்ங்கிறது உலகம் முழுவதும் இருக்கு.இந்தியாவில
அதைக் குறைக்கறதுக்குத்தான், இந்த மாதிரி சர்வதேச போட்டி ஓப்பந்தப்புள்ளி(Internation Competitive Bidding), எல்லாம் வைக்கிறாங்கன்னு நினைக்கிரேன்.

ஒரு போட்டிதன்மையில்(Competition) நாமளும் முன்னாடி போவணும்னா, சலுகை கொடுத்துத்தானே ஆவணும். கப்பல்துறையில் கொடுக்கும் 30% சலுகை உலகம் முழுவதும் இருக்கு. நம்ம நாட்டு கம்பெனிகளுக்கும் அதே மாதிரி கொடுத்தாத்தானே அவங்களாலே சர்வதேச அளவில் போட்டி போட முடியும்.

இந்த மாதிரி சலுகை கொடுக்கலேணணா, அந்தக் கம்பெனிகள் எந்த நாட்டுல சலுகை கிடைக்குதோ அங்கே போய்டுவாங்க.

இப்போ இந்தியாவுல உள்கட்டமைப்பு துறைக்கு 600 பில்லியன் டாலர் வேணுமின்னு நம்ம நிதியமைச்சர் சொல்ரார். சலுகை கொடுத்தாதானுங்களே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எல்லாம் இங்க வருவாங்க.

டாலர் வீழ்ச்சியால ஏற்றுமதி செய்யும்(ஆயத்த ஆடை) தொழில் எல்லாம் நசிஞ்சிருச்சே. அதுக்கெல்லாம் சலுகை ஏதாவது கொடுத்தாத்தான அவங்களாலே தொழில் நடத்த முடியும். வெளி நாடுகள்ள(யூ எஸ்,ஐரோப்பா) உணவு தானியங்களுக்கு மானியம் கொடுக்கிராங்களே.

<==
சாதா கார்களின் இறக்குமதிக்கு என்ன பொருத்த வரை 10% மேல வரி இருக்ககூடாது . ==>
அப்படி சொல்ல முடியாதுன்னு நினைக்கிரேன். ஏன்னா, அவன் ஊர்ல உள்ள காயலாங்கடை காரையெல்லாம் நம்ம தலைல கட்டிடுவான். நம்மாள்களும் வெளிநாட்டு கார்னு வாங்கிடுவாங்க. அப்புரம் இந்தியா ஜங்க் யார்டாதான் இருக்கும்.

இதெல்லாம் அரசாங்கம் அவ்வப்போது உள்ள நிலைமைகளை யோசிச்சு எந்தெந்தத்துறைக்கு, எப்பொ, எப்பொ, எவ்வளவு, கொடுக்கணும்னு முடிவு பண்ண முடியும்.

பொதுவா குறைஞ்ச வரிங்கறது நல்லதுதான்.

ஐடி த்துறைக்குக் கொடுத்த வரிச்சலுகைகூட 10 வருடத்துக்குத்தான்.

கொசுறுத் தகவல்:
சலுகைங்கறது தொழில்களுக்கு மட்டும்னு இல்ல, தனி மனிதனுக்கும் தேவைப்படறப்ப கொடுத்துட்டுதானே ஆகணும்.ஆனால், (தமிழ் நட்டுல) இலவச டிவி எல்லாம் ஓவர்.

அமெரிக்காவில கூட டவுன் பஸ் ஓடுது(நம்மள மாதிரி ஏழைங்கள் போறதுக்குன்னு). அதற்க்கு ஆகும் அதிகப்படியான செலவ உள்ளூர் தொழிலாளர் துறை ஏத்துக்குது.

அனானி வரவுக்கும் ,கருத்துக்கும் நன்றி.

said...

wow it is too hot .....

said...

//கப்பல்துறையில் கொடுக்கும் 30% சலுகை உலகம் முழுவதும் இருக்கு. நம்ம நாட்டு கம்பெனிகளுக்கும் அதே மாதிரி கொடுத்தாத்தானே அவங்களாலே சர்வதேச அளவில் போட்டி போட முடியும்.//

சார் நியாயமான கருத்து, ஆனால் எந்த எந்த கம்பனிக்கு எவ்வளவு சலுகை கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தெரியும் படி இருக்க வேண்டும், உதாரணத்துக்கு Renault-Nissan சமிபத்தில் நமது அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளது அவர்களுக்கு எவ்வளவு சலுகை அளித்துள்ளனர் என்பது தெரியவில்லை. இந்த தகவல்களை நமது அரசு இணைய தளத்திலாவது கட்டாயம் பிரசுரிக்க வேண்டும். அப்படி செய்தாலே போதும், ஊழலை கட்டுபடுத்திடலாம்.

எதிர்ப்பதற்கு மற்றொரு காரணம், சலுகைகள் எல்லா கம்பெனிகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உதாரணத்துக்கு பெரிய IT கம்பனிகள் SEZக்கு குடிபெயர்ந்து சலுகைகளை நீட்டிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சிறிய IT கம்பெனிகள் இப்படி செய்வது கடினம், ஆதலால் இவர்களுக்கு அம்மாதிரி சலுகைகள் கிடைக்காது.
சலுகைகளால் சந்தையில் சழிவு (distortion) ஏற்படும்.

//பொதுவா குறைஞ்ச வரிங்கறது நல்லதுதான்.//

குறைந்த வரிகள், குறைவான தொழில் தடைகள் இருந்தாலே போதும். சலுகைகள் தேவையில்லாமல் போய்விடும்.

//அப்படி சொல்ல முடியாதுன்னு நினைக்கிரேன். ஏன்னா, அவன் ஊர்ல உள்ள காயலாங்கடை காரையெல்லாம் நம்ம தலைல கட்டிடுவான். நம்மாள்களும் வெளிநாட்டு கார்னு வாங்கிடுவாங்க. //

சார் இத ஒத்துக்க முடியாது. நீங்கள் சாதரன் மனிதனின் அறிவை ரொம்ப குறைவா எட போடுறீங்க.
மேலும், 2-வீலர் ஓட்டி எவ்வளோ பேர் ரோட்டில் தினமும் இறந்து போகிறார்கள், அவர்களை கொஞ்சம் எண்ணி பாருங்கள். எவ்வளோ உயிர்களை காப்பாத்திருக்கலாம்.

ஆனால் இன்று கதை வேறு இந்தியாவில்தான் குறைந்த செலவில் கார்கள் தயாரிக்க படுகின்றன. இருந்தாலும், கடந்த 50 ஆண்டுகளில் இறக்குமதி வரி குறைவாக இருந்திருந்தால் ஒரு இந்திய குடிமகனின் சராசரி வாழ்க்கை தரம் எப்படியோ இருந்திருக்கும்.

//இதெல்லாம் அரசாங்கம் அவ்வப்போது உள்ள நிலைமைகளை யோசிச்சு எந்தெந்தத்துறைக்கு, எப்பொ, எப்பொ, எவ்வளவு, கொடுக்கணும்னு முடிவு பண்ண முடியும்.//

அரசாங்கத்தால் இதை ஒழுங்கா நிர்ணயிக்க முடியாது. கார்களின் இறக்குமதி வரி, நமது நாட்டு கம்பனிகளின் விற்பனை பாதிக்கபடாமல் இருக்க உருவாக்கபட்ட்டது. இதில் போது மக்களின் நலன் துளி கூட கிடையாது. இதனால் போது மக்கள் அடைந்ததை விட இழந்தது அதிகம்.

நன்றி சிவா

said...

//CT said...
wow it is too hot .....//

switch on the AC
-DT

said...

//switch on the AC
-DT//

no current ba, we are in tamilnadu.

ஓகை said...

///
K.R.அதியமான். 13230870032840655763 said

i think plain jealosy and heart burn is the reason for many comments in this post. We Indians still have the socialist mentality.///

அப்படித்தான் தோன்றுகிறது.

சாமான்யன் சொல்கிறார்,

//எதோ ஒரு சி என் ஆர் ராவ், ஏதோ அவரால முந்தி மாதிரி பெங்களுருவில வசிக்க முடியலன்னு சொன்னத, ஒரு வேத வாக்கா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.//

உண்மை!

said...

How IT workers are serving beyond the call of profession

HEROES HAPPEN HERE
Preeti Mehra
New Delhi, Feb. 24

It’s one thing to be a good professional and another to go beyond the call of duty. Typically perceived as geeks, some IT professionals and developers have actually gone out of their way to serve a purpose or a common cause.

For instance, Mr Noel Sequeira, a Web developer, has set up an online portal for blood donors in Mumbai to help bridge the divide between willing donors and those in desperate need. The portal, www.mumbaiblooddonors.org, was conceived after Mr Sequeira and his friends went through a harrowing experience when someone close was battling for life in a hospital in Mumbai.

They critically needed blood — but were amazed to find blood banks either hesitant to give blood in the absence of immediate replacement donors — or charging a mini fortune for it. It was then that Noel decided to make a difference. “We are only a month old and 250 donors have already signed up. Besides, we’ve been able to connect some of those in dire need with them,” he says.

Mr Mayur Gupta, who was studying at Indian Institute of Information Technology & Management, Gwalior, developed a hands-free, voice enquiry system in regional languages as part of a graduation project. The software, targeted at Indian farmers, retrieves prevailing prices of commodities and other such queries from the Internet and displays it to the user after recognising speech instructions.
Realtime ticketing

Mr Sanjeev Sarma, who runs IT company Webx, during a project with the Assam State Transport Corporation, found that the system being used for ticketing and accounting was extremely inadequate for the complex operations and heavy traffic of the corporation. “After an analysis, I suggested an online centralised ticketing system, where the entire business could be managed in realtime,” explains Mr Sarma.

From there on the corporation went in for a B2B model which besides giving consumers easy access to tickets through PCOs and Internet cafes, generated employment for 150 educated youth who started running authorised ticketing agencies.

Mr Sequeira, Mr Gupta and Mr Sarma are among those shortlisted by software major Microsoft under its “Heroes Happen Here” programme, which aims to acknowledge such initiatives by IT pros, where they have made use of their professional skills to make a difference. The programme has already received over 500 entries from India.

“It is heartening to see the level of enthusiasm within the technological community in India. What is also very refreshing is how these individuals are not only leveraging their technical skills to deliver on their job roles, but how they are contributing in areas beyond this — be it for the larger benefit of their companies, or for societal good,” Ms Pallavi Kathuria, Director-Server Business Group, Microsoft Corp India, said.

http://www.thehindubusinessline.com/2008/02/25/stories/2008022551430100.htm

கானா பிரபா said...

அடிக்கடி பன்னர்கட்டா ரோடில் இருக்கும் மென்பொருள் தொழிற்சாலைக்கு வந்த அனுபவத்தால் கட்டுரையிலும் பின்னூட்டத்திலும் சில கருத்தை ஏற்கமுடிகின்றது.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails